இறந்ததாக கருதப்பட்டவர் ஈமச்சடங்கு; நேரத்தில் உயிருடன் வந்ததால் பரபரப்பு
Added : மார் 30, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே இறந்ததாக கருதப்பட்டவர் ஈமச்சடங்கு நேரத்தில் உயிருடன் வந்ததால் பரபரப்பு நிலவியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த ஆழ்வார் மலை வனப்பகுதியையொட்டி, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடந்தது. இறந்தவர் யார் என்பதை அறிய அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு, இறந்தவரின் புகைப்படத்தை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், எலவனாசூர்கோட்டை அடுத்த நெடுமானுார் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரை ஒரு வாரமாக காணவில்லை என, அவரது மகன் கவுண்டமணி செந்தில்,35, தேடி வந்தார்.

தியாகதுருகம் அருகே முதியவர் இறந்து கிடந்த தகவலறிந்த கவுண்டமணி செந்தில், அங்கு சென்று பார்த்தார். அது தனது தந்தை சுப்ரமணியன் தான் எனக் கூறி, போலீசாரின் அனுமதியுடன் இறுதி சடங்கு செய்வதற்காக சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். நேற்று மதியம் 3:00 மணியளவில் ஈமச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

அப்போது, காணாமல் போன சுப்ரமணியன் திடீரென அங்கு உயிருடன் வந்தார். அவரை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த போலீசார், முதியவரின் சடலத்தை கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு எடுத்துச் சென்றனர்.

இறந்தவர் யார் என போலீசார் மீண்டும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் எலவனாசூர் கோட்டை பகுதியில் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X