ஏ.டி.எம்., மையத்தில் பெண்ணை ஏமாற்றி ரூ.52 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபர் கைது
Added : மார் 30, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
A youth who cheated a woman and cheated a woman of Rs 52,000 was arrested at the ATM center   ஏ.டி.எம்., மையத்தில் பெண்ணை ஏமாற்றி ரூ.52 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபர் கைது



கடலுார் : கடலுாரில் பெண்ணிடம் வங்கி ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து, ரூ. 52 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் சோனாங்குப்பம் சுனாமி நகரை சேர்ந்தவர் ரவி மனைவி கனிமொழி, 42; அம்மா உணவக ஊழியர். இவர், கடந்த 4ம் தேதி கடலுார் முதுநகர் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றார்.

பணம் எடுக்கத் தெரியாததால், அங்கு நின்றிருந்த வாலிபரிடம் ஏ.டி.எம்., கார்டை கொடுத்து, பணம் எடுத்து தரும்படி கூறினார். அந்த நபர் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுப்பதுபோல் நடித்து, பணம் வரவில்லை என கூறி, வேறு ஏ.டி.எம்., கார்டை கொடுத்து விட்டு சென்றார்.

சிறிது நேரத்தில் கனிமொழியின் வங்கிக் கணக்கில் ரூ. 52 ஆயிரம் பணம் எடுத்ததாக எஸ்.எம்.எஸ்., வந்தது. இதுகுறித்து அவர், கடலூர் முதுநகர் போலீசில் புகார் அளித்தார்.

முதுநகர் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்ததில், அந்த நபர் திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, கண்ணன் மகன் குமரன், 34; என்பது தெரியவந்தது. அதையடுத்து, குமரனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.5 ஆயிரம் பணம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் மற்றும் ஒரு ஏ.டி.எம்., கார்டை பறிமுதல் செய்தனர்.

குமரன், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஏ.டி.எம்., மையத்தில் நின்று கொண்டு, அங்கு வரும் முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்து, மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X