விழுப்புரம் : விழுப்புரத்தில் பெண்ணை தாக்கியதை தட்டிக்கேட்ட பல்பொருள் அங்காடி ஊழியரை, சகோதரர்கள் இருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இப்ராகிம்,45; விழுப்புரம் காந்தி வீதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று மாலை பல்பொருள் அங்காடியில், நோன்பு கஞ்சிக்கான பொருட்களை வாங்க இப்ராகிம் சென்றார்.
அப்போது, அங்கிருந்த ஒரு பெண்ணிடம் இரண்டு வாலிபர்கள் தகராறு செய்து தாக்கினர்.
இதைக்கண்ட இப்ராகிம் மற்றும் அரசமங்கலத்தை சேர்ந்த ராமதாஸ் மகன் தீபக்,23; ஆகியோர் அந்த வாலிபர்களை தட்டிக் கேட்டனர்.
ஆத்திரமடைந்த வாலிபர்கள் இப்ராகிம், தீபக் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தினர். இதில், இப்ராகிம் வயிற்றிலும், தீபக் முகத்திலும் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, தப்பியோட முயன்ற வாலிபர்களை கடை ஊழியர்கள் மடக்கிப் பிடித்து போலீசிற்கு தகவல் தெரிவித்தனர்.
விழுப்புரம் டி.எஸ்.பி., பார்த்திபன் மற்றும் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த இப்ராகிம், தீபக்கை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இப்ராகிம் இறந்தார்.
இரண்டு வாலிபர்களையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், விழுப்புரம் பெரிய காலனி ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த ஞானசேகரன் மகன்கள் ராஜசேகர், 33; வல்லரசு, 24; என தெரியவந்தது.
ஞானசேகரனுக்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த அவரது மகன்கள் ராஜசேகர், வல்லரசு ஆகிய இருவரும் தங்களின் தந்தை மற்றும் சம்பந்தப்பட்ட பெண்ணை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று அந்த பெண்ணை பெரிய காலனியில் ராஜசேகர், வல்லரசு பார்த்துள்ளனர். இருவரும் அந்த பெண்ணை திட்டி தாக்கியபோது, அருகிலிருந்த பல்பொருள் அங்காடியில் பதுங்கியுள்ளார்.
பல்பொருள் அங்காடியில் புகுந்து அந்த பெண்ணை ராஜசேகர், வல்லரசு தாக்கினார். அதை இப்ராகிம் தடுத்தபோது கத்தியால் குத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை நடந்த இடத்தில் எஸ்.பி., ஸ்ரீநாதா நேரில் விசாரணை மேற்கொண்டார்.
ராஜசேகர், வல்லரசுவிடம் விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜசேகர், வல்லரசு கஞ்சா போதையில் இருந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
கொலை சம்பவத்தை கண்டித்து இன்று விழுப்புரத்தில் கடையடைப்பு நடத்த வர்த்தக சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் எம் ஜி ரோட்டில் உள்ள கடையில் ராஜா முகமது ராஜா முகமது என்ற இப்ராஹிம் கொலை நடந்த இடத்தில் எஸ் பி ஸ்ரீநாதா ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் எம்.ஜி.ரோட்டில் உள்ள கடையில் இப்ராஹிம் கொலை செய்யப்பட்ட இடத்தில் எஸ். பி., ஸ்ரீநாதா ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் எம் ஜி ரோட்டில் உள்ள கடையில் ராஜா முகமது ராஜா முகமது என்ற இப்ராஹிம் கொலை நடந்த இடத்தில் எஸ் பி ஸ்ரீநாதா ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் எம்.ஜி.ரோட்டில் உள்ள கடையில் இப்ராஹிம் கொலை செய்யப்பட்ட இடத்தில் எஸ். பி., ஸ்ரீநாதா ஆய்வு செய்தனர்.