உடலில் தீப்பிடித்து எரியும் நோய் பாதித்த சிறுவன் குடும்பத்துக்கு வீட்டு மனைப்பட்டா
Added : மார் 30, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Housing for the family of the boy who was affected by the burning disease   உடலில் தீப்பிடித்து எரியும் நோய் பாதித்த சிறுவன் குடும்பத்துக்கு  வீட்டு மனைப்பட்டா



விழுப்புரம் : திண்டிவனம் அருகே தானாக தீப்பிடித்து எரியும் நோய் பாதித்த சிறுவன் குடும்பத்துக்கு, தேசிய அட்டவணை இனத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதால், அரசு சார்பில் வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த நெடிமோழியனூரை சேர்ந்தவர் கருணாகரன் மனைவி ராஜேஸ்வரி. இவர், கடந்த 2013ம் ஆண்டு, தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். இவரது, மகன்கள் ராகுல், 10; ஜெயராமச்சந்திரன், 6; ஆகியோரது உடம்பில், அடிக்கடி தானாக தீப்பிடித்து எரியும் அரிய நோய் பாதிப்பு இருந்ததால், அரசு சார்பில் உயர் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும், ஜெயராமச்சந்திரன் கடந்த 16.2.2016ல் உயிரிழந்தார்.

தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் உதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ராகுலுக்கு மாதந்தோறும் ரூ.4,000 பராமரிப்பு நிதியுதவி வழங்கப்படுகிறது.

தற்போது ராகுல், நெடிமோழியனுார் அரசுப் பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

வீட்டு மனைப்பட்டா கேட்டு ராகுல் குடும்பத்தினர் கடந்த மாதம் கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர்.

இது குறித்து புதுச்சேரி பா.ஜ., செய்தி தொடர்பாளர் வீரராகவன், தேசிய அட்டவணை இனத்தவர் ஆணைய மண்டல இயக்குனருக்கு, மனு அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து, தேசிய அட்டவணை இனத்தவர் ஆணையம் வீட்டு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பினர்.

நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், கலெக்டர் பழனி வீட்டு மனை பட்டாவை ராஜேஸ்வரியிடம் வழங்கினார். டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவிதேஜா, ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X