அமலை செடியால் பாழாகும் சிறுநாயக்கன்குளம்
Added : மார் 30, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Sirunayakkankulam, which is spoiled by the Amala plant   அமலை செடியால் பாழாகும் சிறுநாயக்கன்குளம்



பழநி--பழநி பழைய தாராபுரம் சாலை அருகே சிறுநாயக்கன்குளம் அமைந்துள்ளது. குளத்தின் பாசனப்பகுதி 500 ஏக்கருக்கு மேல் உள்ளது. அருகிலுள்ள காமராஜ் நகர், பெரியப்பா நகர், கோதைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. சில ஆண்டுகளாக இக்குளத்தில் கழிவுநீர் கலப்பதால் குப்பை சேகரிக்கும் இடமாக மாறி உள்ளது. குளத்தின் நீர் மாசடைந்து உள்ளது. குளம் அமலை செடிகளாலும் ,சாக்கடை நீராலும் முற்றிலும் பாழாகி உள்ளது.

அதிக மழை பெய்யும் போது சூளும் தண்ணீரில் கழிவு, வேதிப்பொருட்களால் வெள்ளை நிற நுரை பல அடி உயரத்திற்கு ஏற்படும். சாக்கடை நீர் கலப்பதால் நோய் தொற்று ஏற்படுகிறது. குளத்தின் பெரும் பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளது. மதகுகளும் சேதமடைந்து உள்ளது.இதை துார் வாரி கழிவு நீர் கலப்பதை தடுக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



கால் களி ல் நோய் தொற்று




நரேந்திரன், காணியாளர், மானியபத்து : சிறு நாயக்கன் குளத்தில் கழிவு நீர் கலப்பதால் விவசாய தொழிலாளர்கள் வயல்களில் இயங்க தயங்குகின்றனர். இறங்கி வேலை செய்யும் போது கால்களில் நோய் தொற்று ஏற்படுகிறது. உடல் நல கோளாறு ஏற்படுகிறது. மதகுகள் சரி செய்யப்பட்டும் இயங்கவில்லை. இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும்.



மனி தர்களுக் கு பாதிப்பு




மணிகண்டன், பேராசிரியர்: குளத்தில் கழிவு நீர் கலப்பதால் சோடியம், கால்சியம், துத்தநாகம், தாமிரம், உள்ளிட்ட வேதிப்பொருட்கள் , நச்சுத்தன்மையுடைய வேதிப்பொருட்கள் குளத்தில் உருவாகிவிடுகிறது.

குளத்து நீரின் ஆக்சிஜன் அளவு குறைந்து இயற்கை தரம் மாறுபடுகிறது.

நீரின், வெப்பநிலை, உப்புத்தன்மை, பி.ஹெச் அளவு முற்றிலும் மாறுபட்டு இயற்கை தாவரங்கள் வளரும் நிலை மாறிவிடுகிறது. நாட்டு தாவரமான அமலை செடி அதிக அளவில் உருவாகிறது.

இது நீர்வாழ் உயிரினங்கள் ,மனிதர்கள் ,குதிரை உள்ளிட்ட விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.



உயிர்வாழும் தன்மை குறையும்




கோகுல கிருஷ்ணன், சமூக ஆர்வலர், பழநி: சாக்கடை நீர் நேரடியாக கலப்பதால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளின் தலைமுறையினர் பாதிக்கப்படுவர். சாக்கடை நீரை சுத்திகரிப்பு செய்து குளத்தில் விட வேண்டும். செடிகளால் கொசு உற்பத்தி மிகவும் அதிகரிக்கும். குளங்களில் சூரிய ஒளி செல்லாதவாறு அமலை செடிகள் தடுப்பதால் நீரின் உயிர்வாழும் தன்மை குறைந்து விடும். அதிகாரிகள் கழிவு நீரை குளத்தில் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும்,என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X