கொசுவால் போச்சு துாக்கம்; நாய்களால் உருவாகுது பீதி பரிதவிப்பில் பழநி 6வது வார்டு மக்கள்
Added : மார் 30, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Mosquito bites; People of Palani 6th Ward are in panic caused by dogs   கொசுவால் போச்சு துாக்கம்; நாய்களால் உருவாகுது பீதி  பரிதவிப்பில் பழநி  6வது வார்டு  மக்கள்



பழநி-கொசுவால் போச்சு துாக்கம், நாய்களால் உருவாகுது பீதி என, பழநி நகராட்சி 6வது வார்டு மக்கள் அல்லல் படுகின்றனர்.

இந்திரா நகர், புது தாராபுரம் ரோடு, இட்டேரி ரோடு உள்ளடக்கிய இந்த வார்டை இணைக்கும் இட்டேரி ரோடு, புது தாராபுரம் ரோடு பகுதிகளில் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இங்குள்ளோர் சிரமத்தை சந்திக்கின்றனர். கொசு தொல்லை மிக அதிகமாக நோய் தொற்று ஏற்படுகிறது. தெரு நாய்கள் தொல்லைகள் மக்கள் பீதியில் உள்ளனர். இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா, பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்றனர் இப்பகுதியினர்.



பள்ளி சிறார்கள் பீதி




ஆனந்த்,தொழிலாளி,இந்திராநகர் : வீதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் நடமாடிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் இதனால் சிரமம் அடைகின்றனர்.



பகலிலும் கடிக்கிறது




மணிகண்டன், வியாபாரி: இந்திரா நகர் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகரிக்க வேண்டும். கொசு தொல்லையால் இரவில் நிம்மதியாக துாங்க முடியவில்லை. பகலிலும் கடித்து குதறுகிறது . இதை தடுக்க மருந்து தெளிக்க வேண்டும்.



நெரிசலால் அவதி




சிவலிங்கம், ரைஸ் மில் உரிமையாளர்: கவுண்டர் இட்டேரி ரோடு பகுதி தற்போது அதிக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. சாலை ஓரங்களில் உள்ள சாக்கடைகளில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.



தெரு நாய்களுக்கு விரைவில் தீர்வு




வீரமணி, கவுன்சிலர் (தி.மு.க.,): வார்டில் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகள் சரி செய்யப்படுகிறது. குப்பை முறையாக அகற்றப்படுகிறது. தெரு நாய்கள் தொல்லை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுள்ளது. இவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் வழிகாட்டுதல்படி விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது, என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X