தி.மு.க., பெண் கவுன்சிலர் கணவர் மீது தாக்குதல்
Added : மார் 31, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

பள்ளிப்பாளையம்:''பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் ஆதரவாளர்கள், வீடு புகுந்து என் கணவரை தாக்கினர்,'' என, தி.மு.க., பெண் கவுன்சிலர் சாந்தி கூறினார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகராட்சி 16வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சாந்தி, 45. இவரது கணவர் சண்முகம். இந்த தம்பதியின் மகன் தங்கமணி, 30, தி.மு.க., இளைஞரணியில் உள்ளார்.

சாந்தியின் கணவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் சண்முகராஜா என்பவர் சீட்டு போட்டுள்ளார். அவர், பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜிடம் வேலை செய்கிறார்.

சீட்டுப்பணம் குறித்து சண்முகம் மற்றும் சண்முகராஜா ஆகியோரிடையே பிரச்னை இருந்தது. இதுதொடர்பாக, இருவருமே போலீசில் புகார் செய்துள்ளனர்.

பள்ளிப்பாளையம் நகராட்சிக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.நகராட்சி அலுவலகத்துக்கு வந்த கவுன்சிலர்சாந்தி, கூட்டத்தை புறக்கணித்தார்.

இதுகுறித்து சாந்தி கூறியதாவது: நகராட்சித் தலைவர் செல்வராஜ் ஆதரவாளர்கள் 30 பேர், என் வீட்டுக்குள் புகுந்து என் கணவரை தாக்கினர்.

போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நகராட்சி கூட்டத்தை புறக்கணித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து நகராட்சித் தலைவர் செல்வராஜ்,''இந்த சம்பவத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

''கவுன்சிலர் சாந்தியின் கணவர் சண்முகம், அவரது மகன் தங்கமணி ஆகிய இருவரும்தான் என் அலுவலகத்துக்கு இரவில் வந்து, என்னிடம் வேலை செய்யும் பணியாளரை தாக்கியுள்ளனர். அதற்கான 'வீடியோ' ஆதாரம் உள்ளது,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X