3 லட்சம் செலவில் குட்டை அமைத்ததாக பொய்க்கணக்கு | சேலம் செய்திகள்| False claim that the well was constructed at a cost of 3 lakhs | Dinamalar
3 லட்சம் செலவில் குட்டை அமைத்ததாக பொய்க்கணக்கு
Added : மார் 31, 2023 | |
Advertisement
 

ஓமலுார்:சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் ரூபாய் செலவில் சங்கன் குட்டை அமைத்ததாக கணக்கு காட்டியுய்ள்ள நிலையில், அப்படி ஒரு பணியே நடக்கவில்லை என கவுன்சிலர்கள் புகார் கூறியுள்ளனர். இதையடுத்து, அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலுார் ஒன்றியக் குழு தலைவர் ராஜேந்திரனிடம், கவுன்சிலர் ரேவதி கொடுத்த புகார் மனுவில், “கடந்த 2022ம் ஆண்டு நவம்பரில் பொன்னாரங்குட்டையில் தேசிய ஊரக வேலை திட்டத்தில், 'சங்கன் குட்டை' அமைத்ததாகவும், அதற்காக இரண்டு லட்சத்து, 94,473 ரூபாய் செலவு செய்ததாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், அப்படி ஒரு பணியே நடக்கவில்லை,” என, கூறியிருந்தார்.

இதுகுறித்து, ஓமலுார் வட்டார வளர்ச்சி அதிகாரி கருணாநிதி, ''முதற்கட்டமாக, குட்டை பணிக்குரிய ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X