கோயம்பேடு சந்தையை நவீனமாக்கும் திட்டம்... 'அம்போ?' : நிலுவை வழக்குகளால் அதிகாரிகளுக்கு நெருக்கடி
Added : மார் 31, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Project to modernize Koyambedu market... Ambo? : Pressure on officials due to pending cases   கோயம்பேடு சந்தையை நவீனமாக்கும் திட்டம்... 'அம்போ?' : நிலுவை வழக்குகளால் அதிகாரிகளுக்கு நெருக்கடி



சென்னை,கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை, 20 கோடி ரூபாயில் நவீனமயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் நெரிசல் குறைப்பு நடவடிக்கையாக, கோயம்பேடில் 80 ஏக்கர் நிலத்தில் காய், கனி, பூ மொத்த விற்பனை அங்காடி வளாகம், கடந்த 1996ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக இந்த வளாகத்தில் ஏற்பட்டுள்ள நெரிசல், பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இதனால், அங்காடி வளாகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிவித்தாலும், சி.எம்.டி.ஏ.,வில் இருந்து வந்து இங்கு ஆதிக்கம் செலுத்தும் கட்டுமான பிரிவு அதிகாரிகளால், திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை.

இதனால், தினசரி திடக்கழிவுகள் அகற்றுவதில் துவக்கி ஆக்கிரமிப்புகள், கடைகள் பயன்பாட்டில் விதிமீறல் என, கோயம்பேடு சந்தை, குளறுபடி மையமாக மாறியுள்ளது.

புதிய திட்டம்

தற்போதைய சூழலுக்கு ஏற்ப, கோயம்பேடு சந்தையை நவீனமயமாக்க வேண்டுமென, தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி, இந்த அங்காடி வளாகத்தை, 20 கோடி ரூபாயில் நவீனமயமாக்கும் திட்டம், 2021 - 22ம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது.

இதை செயல்படுத்தவும், நெரிசல் குறைப்பு பணிகளுக்கான பரிந்துரைகள் வழங்கவும், கலந்தாலோசகர் நியமிக்கப்படுவார் என, தமிழக அரசு 2022 - 23ல் அறிவித்தது.

ஆனால், கள நிலையில் இதற்கான எந்த பணிகளும் நடந்ததாகத் தெரியவில்லை என, புகார் எழுந்துள்ளது.

இது குறித்து கோயம்பேடு அங்காடி வியாபாரிகள் கூறியதாவது:

தமிழக அரசு அறிவித்தபடி, இதற்கு கலந்தாலோசகர் நியமிக்கப்பட்டார். அவர் அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், அடுத்தகட்ட பணிகளை அங்காடி நிர்வாகக் குழு எடுக்க வேண்டும்.

இதற்கு, பழைய கடைகளை இடித்து, அந்த நிலத்தின் உரிமை, அதிகார அமைப்பிடம் இருக்க வேண்டும். கோயம்பேடு வளாகத்தில் கடைகள் ஏலம் வாயிலாக ஒதுக்கப்பட்டு, வியாபாரிகளுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

குழப்பம்

இதன்படி, விற்பனை பத்திரம் வைத்திருப்பவர்களிடம் இருந்து கடைகளை, அங்காடி நிர்வாகக் குழு பெற்றால் மட்டுமே, நவீனமயமாக்கலுக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியும்.

இதில், வியாபாரிகளிடம் ஒருமித்த கருத்தை உருவாக்கி, கடைகள் மற்றும் நிலத்தின் உரிமையை எப்படி பெறுவது என்பதில், அங்காடி நிர்வாகக் குழுவுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அங்காடி திட்டத்துக்காக சி.எம்.டி.ஏ., கையகப்படுத்திய நிலம் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு இதில் தலையிட்டால் தான், சுமூக தீர்வு ஏற்படும். நவீனமயமாக்கல் பணிகளை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X