17 மணி நேரம் மின் தடையால் மக்கள் அவதி
Added : மார் 31, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
People suffered due to power cut for 17 hours   17 மணி நேரம் மின் தடையால் மக்கள் அவதி

செங்குன்றம்:செங்குன்றம் ஜி.என்.டி., சாலை, முர்த்துஜா உசேன் தெரு சந்திப்பில், மழை நீர் வடிகாலுக்காக 8 அடி அகலம், 7 அடி ஆழத்தில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணி அளவில் பள்ளம் தோண்டினர்.

அப்போது, அங்கிருந்த உயர் மின் அழுத்த இணைப்பு, நாரவாரிக்குப்பம் பேரூராட்சியின் குடிநீர் குழாய் இணைப்பு, பொது தொலைபேசி இணைப்பு மற்றும் இணையதள இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இதனால், காய்கறி பஜார் மற்றும் வண்டிமேடு பகுதியில் உள்ள, 500க்கும் மேற்பட்ட வீடு, கடை, மருத்துவமனைகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தகவல் அறிந்த செங்குன்றம் மின் வாரிய அதிகாரிகள், நேற்று அதிகாலை 5:00 மணி முதல், மின் இணைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், 17 மணி நேரம் மின் வசதியின்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதன் பிறகே மின் வினியோகம் சீரானது.



அடாவடி




நெடுஞ்சாலைத்துறை, மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை, மின் வாரியம், பேரூராட்சி நிர்வாகம், பொது தொலைபேசி நிர்வாகம் ஆகியவற்றுடன், முறையாக கலந்தாலோசித்து செய்ய வேண்டும். ஆனால், அடாவடியாக செயல்படும் அத்துறையால், செங்குன்றம் ஜி.என்.டி., சாலையில் உள்ள, 120க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், 12 மின் மாற்றிகள் உறுதியிழந்து, ஆபத்தான நிலையில் உள்ளன.

நெடுஞ்சாலைத்துறையினர், அவற்றை தற்காலிகமாக சமாளிக்க, மின் வாரியத்தின் பாதுகாப்பு அனுமதி இரும்பு குழாய் மற்றும் மரச்சட்டங்களை வைத்து, 'முட்டு' கொடுத்துள்ளனர்.

அவை எதிர்பாராமல் சரிந்தால், அங்குள்ள மின் கம்பங்கள், மின் மாற்றிகள் சாலையில் விழுந்து, பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் 'அபாயம்' உள்ளது.



தொடரும் பீதி


கடந்த, 27ம் தேதி மாலை, செங்குன்றம் காவல் நிலையம் அருகே, மேற்கண்ட பிரச்னையால், தாழ்வாக தொங்கிய மின் கம்பி, தனியார் பேருந்தின் மீது விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் மின் வாரியத்தினர், உடனடியாக செயல்பட்டு ஆபத்தான மின் இணைப்புகளை துண்டித்து, பெரும் விபத்தை தவிர்த்தனர்.



 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X