கடன் உச்சவரம்பு ரூ.5 கோடியாக உயர்வு: தொழில் துறையினர் வரவேற்பு
Added : ஏப் 01, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

திருப்பூர்:கடன் உறுதி திட்டத்தில், 0.37 சதவீத வட்டியில், ஐந்து கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் அறிவிப்புக்கு, தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நடப்பு நிதியாண்டுக்கான (2023-24) மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பில், குறு, சிறு நிறுவனங்களுக்கான கடன் திட்டம் மறுசீரமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டது.

அதன்படி, குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துவங்க கடன் உச்சவரம்பு அதிகரித்துள்ளது; வட்டியும் குறைக்கப்பட்டுஉள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:

மத்திய அரசு, குறு, சிறு தொழில் துவங்கும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கிறது. அதாவது, அரசு உத்தரவாதத்தில், கடன் உதவி வழங்கப்படுகிறது. இதுவரை, 2 சதவீத வட்டியில், ஒரு கோடி ரூபாய் வரை, பிணையமில்லாத கடன் வழங்கப்பட்டது.

பட்ஜெட்டில் அறிவித்திருந்த நிலையில், கடன் உறுதி திட்டத்தில், 0.37 சதவீத வட்டியில், ஐந்து கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

நாளை (இன்று) முதல் அமலுக்கு வரும் இத்தகைய அறிவிப்பால், எவ்வித பிணையமும் இல்லாமல், ஐந்து கோடி ரூபாய் வரை கடன் பெற்று, குறு, சிறு தொழில்களை துவங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும், 10 லட்சம் ரூபாய் வரையிலான நிலுவை மீதான நடவடிக்கை தளர்த்தி, கடன் வழங்கும் அறிவிப்பால் பலரும் பயன்பெறுவர்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X