ரூ.100 கோடி மோசடி வழக்கு சி.பி.ஐ., விசாரிக்க வலியுறுத்தல்
Added : ஏப் 01, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
CBI urged to investigate Rs 100 crore fraud case   ரூ.100 கோடி மோசடி வழக்கு சி.பி.ஐ., விசாரிக்க வலியுறுத்தல்

பல்லடம்,:பல்லடத்தில், 100 கோடி ரூபாய் மோசடி வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் - வடுகபாளையத்தைச் சேர்ந்த சேகர் மனைவி பிரவீணா, 36, திருப்பூரைச் சேர்ந்த தமிழரசன், 51, பல்லடம் அடுத்த வேலப்பகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன்கள் சிவக்குமார், 43, விஜயகுமார், 43.

இவர்கள், சொத்துப் பத்திரங்களை அடமானம் வைத்து கடன் வாங்கித் தருவதாகக் கூறி, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில், 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தனர்.

இது தொடர்பாக, கோவையைச் சேர்ந்த குமரேசன், 48, என்பவர் புகாரின்படி, திருச்சியில் பதுங்கியிருந்த பிரவீணா, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதில் தொடர்புடைய தமிழரசன், சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.

தலைமறைவாக உள்ள சிவக்குமார், விஜயகுமார், அவரது மகன் ராகுல் பாலாஜி ஆகியோரை தனிப்படை போலீசார் தேடுகின்றனர்.

பாதிக்கப்பட்டோர் கூறியதாவது:

மோசடியில் ஈடுபட்ட சிவக்குமார், விஜயகுமார் மற்றும் ராகுல் பாலாஜி ஆகியோருடன் மேலும் பலர் தொடர்பில் உள்ளனர். வங்கி அதிகாரிகள் சிலரும் இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்து உள்ளனர்.

போலீசார் சிலரின் ஆதரவும் இவர்களுக்கு இருப்பதாக சந்தேகம் உள்ளதால், இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X