அரை சவரன் தோடுக்காக மூதாட்டி அடித்துக் கொலை | கிருஷ்ணகிரி செய்திகள்| Old woman beaten to death for half a razor | Dinamalar
அரை சவரன் தோடுக்காக மூதாட்டி அடித்துக் கொலை
Added : ஏப் 01, 2023 | |
Advertisement
 

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்த கும்மனுாரைச் சேர்ந்த மூதாட்டி பொன்னியம்மாள், 90, அதே பகுதியில் தன் மகள் ராதா வீட்டில் வசித்து வந்தார்.

இவர் நேற்று காலை, 9:00 மணிக்கு அப்பகுதி மாரியம்மன் கோவில் அருகே மாந்தோப்பு வழியாக சென்றார்.

அப்போது, 'டூ - வீலரில்' வந்த மர்ம நபர்கள், பொன்னியம்மாளை வழிமறித்து அவரது தலையில் செங்கல், கட்டையால் தாக்கி, காதில் அணிந்திருந்த அரை சவரன் தோடு, 6,000 ரூபாயை பறித்து தப்பினர்.

படுகாயமடைந்த பொன்னியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கொள்ளையர்கள், பொன்னியம்மாளின் ஒரு காதில் இருந்த தங்க தோட்டை கழட்ட முடியாததால் காதையே அறுத்து தங்க தோட்டை எடுத்துச் சென்றனர்.

கொலை செய்யப்பட்ட பொன்னியம்மாள், வங்கியில் இருந்த தன் முதியோர் உதவித்தொகை பணம், 6,000 ரூபாயை எடுத்து வரும் போது, மர்ம நபர்கள் நோட்டமிட்டு மூதாட்டியை கொலை செய்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X