மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கல்: வரவை விட செலவு குறைவு; ரூ.௬.௨௨ கோடி உபரி
Added : ஏப் 01, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

ஈரோடு: மாநகராட்சி நடப்பு நிதியாண்டு பட்ஜெட், நேற்று தாக் கல் செய்யப்பட்டது. இதில் வரவை விட செலவு குறைவாக இருக்கும். உபரியாக, 6.22 கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டு பட்ஜெட், மாமன்ற சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் முன்னிலை வகித்தனர்.
தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைப்படி, மாநகராட்சி வருவாய் மற்றும் மூலதனநிதி, குடிநீர், வடிகால்நிதி, ஆரம்ப கல்வி நிதி என மொத்த வருவாய் வரவு, 629.12 கோடி.இதில் மொத்த மூலதன செலவு மற்றும் சாதாரண செலவு, 622.89 கோடி. உபரியாக, 6.22 கோடி ரூபாய் இருக்கும். இதில் சொத்துவரி மூலம், 58.70 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இருந்து வருவாய் நிதிக்கு, 26.30 கோடி; குடிநீர் மற்றும் வடிகால் நிதிக்கு, 23.30 கோடி; ஆரம்ப கல்வி நிதிக்கு, 9.10 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.மாநகராட்சி எல்லைக்குள் இயங்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபார ஸ்தாபனங்கள் மூலமாகவும், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மூலமாகவும் நடப்பு நிதியாண்டில், ஏழு கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதிவுத்துறை மூலமாக, 8 கோடி ரூபாய்; கேளிக்கை வரியாக, 3 கோடி என, 11 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாநகராட்சி வணிக வளாகம், பஸ் ஸ்டாண்ட், வாகன நிறுத்தம் மற்றும் சிறு குத்தகை இனங்கள் மூலமாக நடப்பு நிதியாண்டில், 15.9 கோடி வருவாய் கிடைக்கும். ஒப்பந்ததாரர், பிளம்பர், பதிவு கட்டணம் தொழில் உரிமக் கட்டணம், குடிநீர் பாதாள சாக்கடை கட்டணம் மூலமாக, 54.98 கோடி வருவாய் கிடைக்கும்.
இதே போல மாநகராட்சி பணியாளர்களுக்கு நடப்பாண்டு ஊதிய செலவினம், 90.76 கோடி; ஓய்வூதிய பயன்களுக்கு, 25 கோடி ரூபாய்; நிர்வாக செலவினங்களுக்கு, 5.15 கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே போல வருவாய், குடிநீர் மற்றும் கல்வி நிதிகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் செலவினங்களுக்காக, 71.17 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிகிறது.
மாநகராட்சி பெறப்பட்ட கடன்களுக்காக அசல் மற்றும் வட்டி செலவினங்கள், 23.88 கோடி ரூபாய் செலவாகும். வருவாய், குடிநீர் மற்றும் கல்வி நிதிகளில் நடப்பு நிதியாண்டில் மூலதன பணிகளுக்காக, 358.16 கோடி செலவாகும். தார்ச்சாலைகளை சீரமைக்க, 7.20 கோடி ரூபாய்; மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற, 5 கோடி ரூபாய்க்கான கருத்துரு அரசுக்கு அனுப்பபட்டுள்ளது. மழைநீர் வடிகால் அமைப்பதற்கு, 10 கோடி ரூபாய்க்கு கருத்துரு அனுப்பபட்டுள்ளதாக, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X