நுாலகர், விளையாட்டு இயக்குனர் பணியிடம் காலி புதிய அரசு கல்லுாரிகளில் மாணவர் பாதிப்பு
Added : ஏப் 01, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

கோவை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அரசு கல்லுாரிகளில் நுாலகர் மற்றும் விளையாட்டு இயக்குனர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் தமிழக அரசு தரப்பில் புதிய கல்லுாரிகள் துவக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக மொழி மற்றும் கலை பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு, பின் படிப்படியாக அறிவியல் பாடப்பிரிவுகள் துவக்கப்படும்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில், 90 என்ற அளவில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் இருந்தன; தற்போது, 163 கல்லுாரிகளாக அதிகரித்துள்ளன. கடந்த, ஒன்றரை ஆண்டில் மட்டும், 13 கல்லுாரிகள் புதிதாக துவக்கப்பட்டுள்ளன.

மூன்றாண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட கல்லுாரிகளிலும் இதுவரை நுாலகர், விளையாட்டு இயக்குனர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படவில்லை. பள்ளிகள் அளவில் விளையாட்டு துறையில் சாதித்து வரும் மாணவர்கள் இதுபோன்ற கல்லுாரிகளில் போதிய வழிகாட்டுதல் இன்றி, வாய்ப்புகளை இழக்கும் சூழல் தொடர்கிறது.

மொத்தமுள்ள, 163 கல்லுாரிகளில், 60 கல்லுாரிகளில் நுாலகர், விளையாட்டு இயக்குனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. கோவையில் புதிதாக துவக்கப்பட்ட அரசு கல்லுாரியின் பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,'மாணவர்கள் விளையாட்டு பிரிவில் மாவட்ட அளவில் சாதித்து சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கான வழிகாட்டுதல்கள் இல்லை.

விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்கள் பாதிக்காத வகையில், அருகில் உள்ள கல்லுாரி விளையாட்டு இயக்குனர்களின் வழிகாட்டுதல்களாவது, கிடைக்கும் வகையில் ஆரம்பம் முதலே செயல்பாடுகள் வகுக்கவேண்டும். அருகிலுள்ள அரசு கல்லுாரி நுாலகங்களை புதிய கல்லுாரி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கவேண்டும்' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X