கைவிடப்பட்ட கண்மாய், வாய்க்கால்களை பராமரிக்க நிதி தேவை; *வாய்க்கால்கள் அழிக்கப்பட்டால் மழை,வெள்ளம் சேதம் ஏற்படுத்தும்
Updated : ஏப் 02, 2023 | Added : ஏப் 02, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Abandoned culverts and drains require funds to maintain them : *If the drains are destroyed, rains and floods will cause damage   கைவிடப்பட்ட கண்மாய், வாய்க்கால்களை பராமரிக்க நிதி தேவை;  *வாய்க்கால்கள் அழிக்கப்பட்டால் மழை,வெள்ளம் சேதம் ஏற்படுத்தும்



மதுரை: தமிழகத்தில் ஊராட்சி ஒன்றியம், நீர்வளத்துறையால் கைவிடப்பட்ட கண்மாய், வாய்க்கால்களை பராமரிக்க அரசு நிதி ஒதுக்காவிட்டால் அவை நிரந்தர ஆக்கிரமிப்பில் சிக்கி நீர்வழித்தடமும் நீராதாரமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாய்கள், அவற்றின் வாய்க்கால்கள், நீர்வளத்துறையின் பாசன கண்மாய்கள், அடுத்தடுத்த கண்மாய்களுக்கு செல்லும் வாய்க்கால்கள் அனைத்தும் நீர்ப்பாசனத்திற்கு பயன்பட்டன. குடியிருப்புகள் பெருகியதால் ஆங்காங்கே உள்ள கண்மாய்களின் பாசனப்பரப்பு குறைந்து நின்று போனது. பாசன வசதி இல்லாத கண்மாய்களையும், அவற்றின் வாய்க்கால்களையும் நீர்வளத்துறை பராமரிப்பது இல்லை. அதாவது இவற்றை பராமரிக்க தனியாக நிதி ஒதுக்குவதில்லை. இப்படி நீர்வளத்துறையின் கீழ் மட்டும் 500 கண்மாய்கள், வாய்க்கால்கள் அரசு ஆக்கிரமிப்பிலும், தனிநபர் ஆக்கிரமிப்பிலும் சிக்கி சீரழிகின்றன.

ஊராட்சி, நகர்ப்புறம், மாநகராட்சி பகுதிகளில் கைவிடப்பட்ட கண்மாய், நீர்நிலை இருந்தால் அந்தந்த கிராம, நகராட்சி, மாநகராட்சிகளே பராமரிக்க வேண்டும் என 1997 ல் நகராட்சி துறையின் சார்பில் அரசாணை 277 வெளியிடப்பட்டது. பல்வேறு திட்டங்களின் கீழ் இவற்றுக்கு தொடர் நிதி ஒதுக்கப்பட்டாலும் கைவிடப்பட்ட கண்மாய், வாய்க்கால்களை கண்டு கொள்வதே இல்லை.

பாசனத்திற்கு பயன்படா விட்டாலும் தொடர் மழை பெய்து ஒரு கண்மாயில் 6 மாதத்திற்கு நீர் நிறைந்திருந்தால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளின் நீராதாரமாக நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு உதவும். 500 கண்மாய்களையும் முறையாக பராமரித்தால் தண்ணீர்ப் பஞ்சமின்றி எளிதில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம்.

சங்கிலித்தொடர் கண்மாய்களின் வாய்க்கால் அழிக்கப்பட்டால் திடீரென பெருமழை பெய்யும் போது ஊருக்குள் தண்ணீர் புகுந்து நகரே அழியும் அபாயமுள்ளது. வாய்க்கால்களின் வழித்தடத்தை அழியாமல் பாதுகாத்தால் மழை பெய்யும் போது தண்ணீர் தானாக கண்மாயை அடைந்து நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்தும்.

பாசன வசதியுள்ள கண்மாய்களையும், வாய்க்கால்களையும் பராமரிப்பதற்கு மட்டும் நீர்வளத்துறையின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது. நிதியில்லாத காரணத்தால் நீர்வளத்துறையும் கண்டுகொள்வதில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் நிதியில் கைவிடப்பட்ட கண்மாய், வாய்க்கால்களை பராமரிக்க வேண்டும் அல்லது தனியாக நீர்வளத்துறைக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X