கோவை: மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
* திருவனந்தபுரம்- சென்னை எழும்பூர் ரயில்(வண்டி எண்: 06044) வரும் 5 மற்றும் 12 ஆகிய இரு தினங்கள், திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இரவு 7:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனை சென்றடையும்.
* மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் ரயில் (வண்டி எண்: 06043) வரும் 6 மற்றும் 13 ஆகிய இரு தினங்கள், சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் மதியம் 2:25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:45 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் சென்றடையும்.
* இந்த ரயிலானது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
எர்ணாகுளம்- சென்னை சிறப்பு ரயில்
* எர்ணாகுளம்- சென்னை எழும்பூர் ரயில் (வண்டி எண்: 06046) வரும் 9 மற்றும் 16ம் தேதி, எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேஷனில் இரவு 11:20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:05 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனை சென்றடையும்.
* மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்-- எர்ணாகுளம் ரயில் (வண்டி எண்: 06045) வரும் 10 மற்றும் 17ம் தேதி, சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மதியம் 2:25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3:10 மணிக்கு எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேஷனை சென்றடையும்.
இந்த ரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.