கன்னியாகுமரி - வட்டக்கோட்டை படகு சேவை துவக்கி வைப்பு கடலில் அமையுது கண்ணாடி கூண்டுபாலம்
Added : மே 25, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Kanyakumari - Vattakkottai ferry service is launched and the glass cage bridge is located on the sea   கன்னியாகுமரி - வட்டக்கோட்டை படகு சேவை துவக்கி வைப்பு கடலில் அமையுது கண்ணாடி கூண்டுபாலம்

நாகர்கோவில்:கன்னியாகுமரியிலிருந்து வட்டக்கோட்டைக்கு படகு சேவையை துவக்கிய அமைச்சர் வேலு கடலில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியையும் துவக்கினார்.

கன்னியாகுமரியில் இருந்து ஏழு கி.மீ. துாரத்தில் வட்டக்கோட்டை உள்ளது. திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோட்டை மன்னர் கால போர் தந்திரங்களை விளக்கும் இடமாக உள்ளது. இதை காண கடலில் ஏழு கி.மீ. துாரம் பயணிக்கும் வகையில் நேற்று முதல் தாமிரபரணி திருவள்ளுவர் என இரண்டு படகுகள் இயக்கப்படுகின்றன.

இதை அமைச்சர் வேலு கொடியசைத்து துவக்கினார். கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்படுகிறது. 4 மீட்டர் அகலம் 97 மீட்டர் நீளத்தில் கட்டப்படும் இப்பாலத்துக்கான பணியையும் அமைச்சர் வேலு துவக்கினார்.

பின் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார். விபத்துக்களை குறைக்க அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து முயற்சிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அமைச்சர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ் ராஜேஷ்குமார் மேயர் மகேஷ் கலெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



விதிமீறலாமா




படகு சேவையை துவக்கி வைத்த பின் அமைச்சர்கள் வேலு மனோதங்கராஜ் உள்ளிட்டோர் விவேகானந்தர் பாறைக்கு படகில் உயிர்பாதுகாப்பு ஜாக்கெட் அணியாமல் சென்றனர். இதை கவனித்த சுற்றுலா பயணிகள் அமைச்சர்களே விதிமீறலாமா என கேள்வி எழுப்பினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் நாகர்கோவில் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X