பட்டதாரி ஆசிரியர்களின் கலந்தாய்வு கதறல்; காத்திருந்து காத்திருந்து காலியிடம் தெரியலையே...
Added : மே 26, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Graduate teachers consultation clamor; Wait and wait and dont know the vacancy...  பட்டதாரி ஆசிரியர்களின் கலந்தாய்வு கதறல்;  காத்திருந்து காத்திருந்து காலியிடம் தெரியலையே...

மதுரை : மதுரையில் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் மாலை 5:30 மணி வரை காலியிடங்கள் விபரம் காண்பிக்கப்படாததால் நேற்று பங்கேற்க வந்த ஆசிரியர்கள் கடுப்படைந்தனர்.

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 15 முதல் துவங்கியது. நேற்று (மே 25) பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் பணி மாறுதல் கலந்தாய்வு இளங்கோ மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் நடந்தது. காலை முதல் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குவிந்தனர். மதியம் 1:00 மணிக்கு கலந்தாய்வு துவங்கும் எனக் கூறியதால் அதுவரை ஆசிரியர்கள் காத்திருந்தனர். ஆனால் மாலை 5:30 மணி வரை துவங்காததால் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறியதாவது: 'எமிஸ்' குளறுபடியால் இந்தாண்டு துவக்கம் முதல் ஆன்லைன் கலந்தாய்வு குழப்பமாகவே நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு துவங்கும் என கூறி மாலை 5:30 மணிக்கு மேல் 'சர்வர்' பிரச்னையுடன் துவங்கியது. ஒருவர் ஒரு இடம் தேர்வு செய்ய அரை மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. மேலும் ஒரு இடத்தை தேர்வு செய்யும் ஆசிரியரின் பணியில் இருந்த இடம் காலியிடப் பட்டியலில் காண்பிக்கப்படவில்லை. சீனியாரிட்டி விவரப் பட்டியலிலும் குளறுபடி ஏற்பட்டது.

சிலர் இடம் தேர்வு செய்த பின் அவர்களின் சீனியாரிட்டி விவரம் காண்பிக்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்த காலியிடங்கள் ஒரே நேரத்தில் காட்டப்படவில்லை. கலந்தாய்வு நடக்கும்போதே 'சிபாரிசு' அடிப்படையில் காலியிடங்கள் விலை போவதால் இதுபோன்ற பிரச்னைகள் எழுகின்றன. போதிய திட்டமிடல் இல்லை. ஆசிரியர்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர், என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Senthil - Proud to be an Indian - Paramakudi,இந்தியா
26-மே-202310:54:10 IST Report Abuse
Senthil - Proud to be an Indian வேலை பார்ப்பது இல்லை, சம்பளம் அதிகம், வேளையில் ஈடுபாடு இல்லை, தங்கள் குழந்தைகள் போல் அரசு பள்ளி குழந்தைகளை நினைப்பதும் இல்லை, நேரத்தை கடை பிடிப்பதும் இல்லை- அனால் வேலை செய்யும் பள்ளி மட்டும் அவங்க வீட்டுக்கு பக்கத்துல வேண்டும் இன்னமும் நம்புங்க குரு மூன்றாவது தெய்வம்னு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X