அமராவதி அணையில் நீர் திறக்க அரசுக்கு கருத்துரு: ஜூன் 1ல் திறக்க திட்டம்
Added : மே 28, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Concept for government to open water in Amaravati Dam: Plan to open on June 1   அமராவதி அணையில் நீர் திறக்க அரசுக்கு கருத்துரு: ஜூன் 1ல் திறக்க திட்டம்

உடுமலை:உடுமலை, அமராவதி அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, வரும் ஜூன் 1 முதல் நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், கல்லாபுரம், ராகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு ஆகிய எட்டு ராஜவாய்க்கால்களுக்கு உட்பட்ட, 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நடப்பு நீர்ப்பாசன ஆண்டில், பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு, வரும் ஜூன் 1 முதல், குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்க, விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படையில், நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, ஜூன் 1 முதல், 135 நாட்களில், உரிய இடைவெளி விட்டு நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்டதும், நீர் திறக்கப்படும்,' என்றனர்.



உயிர் தண்ணீர்




அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில், திருப்பூர், கரூர் மாவட்டங்களில், தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில், அலங்கியம் முதல் கரூர் வரை, 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட, 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அதேபோல், புதிய ஆயக்கட்டு பாசனத்தில், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.

பாசன பகுதிகளிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கரும்பு அறுவடை முடிந்ததும், கட்டை கரும்பு மற்றும் நடவு மேற்கொள்ள, அமராவதி அணையிலிருந்து உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜூனில், தென்மேற்கு பருவ மழை துவக்கியதும், அணை நீர் இருப்பை பொருத்து, நீர் திறக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X