பனியன் நிறுவனங்களிடம் ரூ.9.30 கோடி மோசடி
Added : மே 28, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
9.30 Crore Fraud of Banyan Companies   பனியன் நிறுவனங்களிடம் ரூ.9.30 கோடி மோசடி

திருப்பூர்:திருப்பூரில், உள்நாட்டு பனியன் நிறுவன உரிமையாளர்களிடம், 9.30 கோடி ரூபாய்க்கு ஆடைகளை பெற்று மோசடி செய்த வர்த்தக நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், தாராபுரம் ரோட்டைச் சேர்ந்த பழனிசாமி உட்பட, 20க்கும் மேற்பட்டோர் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவிடம் புகார் மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் எங்களிடம், சென்னை, தி.நகரில் உள்ள, 'மங்கல்தீப் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்தை சேர்ந்த ராமச்சந்திரன், ராஜேஷ், ரத்தன் ஆகியோர், பனியன் துணிகளை சில ஆண்டுகளாக வாங்கி வந்தனர்.

ஆரம்பத்தில் வாங்கிய போது, பணம் கொடுத்து வந்தனர். நாளடைவில், பணத்தை சரியாக கொடுக்காமல் காலம் கடத்தினர். இதுபோன்று, திருப்பூரைச் சேர்ந்த பல உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்களிடம் வியாபாரம் மேற்கொண்டனர்.

எங்களிடம் வாங்கிய பனியன் துணிகளுக்கு காசோலை வழங்கினர். அதை வங்கியில் செலுத்தினால், 'ரிடர்ன்' ஆகிறது. இதுகுறித்து கேட்டால், உரிய பதில் அளிப்பதில்லை. இவ்வாறாக, 49 பேருக்கு, 9 கோடியே, 30 லட்சம் ரூபாயை தராமல் மோசடி செய்துள்ளனர். எங்களை ஏமாற்றியவர்கள் மீது, நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தரவேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X