கோடை விழாவில் படகு சவாரி துவக்கம்
Added : மே 28, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Launch of boat ride in summer festival   கோடை விழாவில் படகு சவாரி துவக்கம்

வால்பாறை:கோவை மாவட்டம், வால்பாறையில் கோடைவிழா நேற்று முன்தினம் துவங்கியது. கோடை விழாவில், தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி, வனத்துறை சார்பில் கண்காட்சி மற்றும் சுற்றுலாத்துறை, தேயிலைவாரியம், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைத்து, கண்காட்சி நடக்கிறது. கலை பண்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நேற்று காலை, 11:00 மணிக்கு செல்லபிராணிகள் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் வெங்கடாசலம் ஆகியோர் துவக்கி வைத்தனர். அழகான வளர்ப்பு நாய்கள், உத்தரவுக்கு பணிந்து விளையாடின.

கோடை விழாவை காண வந்த சுற்றுலா பயணியரை கவரும் வகையில், படகுசவாரி நேற்று துவங்கப்பட்டது. ஏற்கனவே, 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருந்த படகு இல்லம் நேற்று திறக்கப்பட்டு, மக்கள் படகு சவாரி செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

காலில் மிதித்து இயக்கும் பெடல் படகில் பயணித்து, உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சியடைந்தனர். படகு சவாரிக்கு கட்டணம் இன்றி, இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர்.

விழாவில், இன்று 28ம் தேதி மாலை, 3:00 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கும் நிறைவு விழாவில், அமைச்சர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X