ஆதரவற்ற நோயாளிகளுக்கு நிதி திரட்ட பட்டிமன்றம்
Added : மே 28, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Bar to raise funds for destitute patients   ஆதரவற்ற நோயாளிகளுக்கு நிதி திரட்ட பட்டிமன்றம்



மதுரை : மதுரை ஐஸ்வர்யம் டிரஸ்ட், புன்னகை பூக்கள் சிறப்பு குழந்தைகள் மையம் சார்பில் லட்சுமி சுந்தரம் ஹாலில் 'இன்றைய தலைமுறையின் பெரும் சவால் பிள்ளைகளை வளர்ப்பதா, பெற்றோரை பராமரிப்பதா' என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.

ஆதரவற்ற நோயாளிகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்டது.

பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த இப்பட்டிமன்றத்தில் பிள்ளைகளை வளர்ப்பதே சவால் என்ற தலைப்பில் கோகுலகிருஷ்ணன், கருணாநிதி, கவிதா ஆகியோரும் பெற்றோரை பராமரிப்பதே என்ற தலைப்பில் ராஜா, ரேவதி சுப்புலட்சுமி, ராஜ்குமார் ஆகியோரும் பேசினர்.

நிறைவில் பேராசிரியர் சாலமன் பாப்பையா பேசியதாவது: ஆடம்பரமாக வாழ கடன் வாங்கி சுமக்கிறோம், ஆனால் குழந்தைகள் தனிமையிலேயே வளர்கின்றனர். தற்போது உள்ள குழந்தைகள் நம் கைப்பிடியில் இல்லை. குழந்தைகளிடம் நாம் சொல்லி நல் வழிகாட்டினாலும் அவர்கள் வினையை அவர்களே தேடுகின்றனர்.

பெற்றோர் இல்லை என்றால் நம் மனம் துயரத்தில் ஆழ்த்தும். பெற்றோரை பலர் அநாதையாக ரோட்டில் விட்டுச் செல்கின்றனர். முதுமை எதிலும் தெளிவில்லாமல் செய்துவிடும்.

ஆனால் முதுமையில் அவர்களை நாம் பாதுகாப்பது கடவுளுக்கு செய்யும் தொண்டு. பெற்றோரை பராமரிப்பது சவால். அவர்கள் என்ன பிழை செய்தாலும், பேசினாலும் அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

விழாவில் ஐஸ்வர்யம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் பாலகுருசாமி, அறங்காவலர்கள் டாக்டர் அமுதநிலவன், டாக்டர் சபரிமணிகண்டன், டாக்டர் ஸ்ரீவித்யா மஞ்சுநாத், பொதுமக்கள் பங்கேற்றனர். ஆதரவற்றோருக்கு நன்கொடையாக காசோலை வழங்கினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X