மது விற்பனைக்கு 'டோக்கன்' முறை?
Updated : மே 28, 2023 | Added : மே 28, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

சென்னை: கூடுதல் விலை முறைகேட்டை தடுக்க, ஒரு இடத்தில் 'டோக்கன்' வழங்கவும், 'டாஸ்மாக்' கடைகளில் மது பாட்டிலை விற்கவும், தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
'டாஸ்மாக்' கடைகளில், பாட்டிலுக்கு கூடுதலாக, 30 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.


இதை தடுக்க, 'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, க்யு.ஆர்.கோடு குறியீடு' வாயிலாக, 'டிஜிட்டல்' முறையில் பணம் வசூலிக்க, அனைத்து கடைக்கும், விற்பனை முனைய கருவி வழங்கப்பட்டு உள்ளன. அதில் பணம் செலுத்த, வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டினாலும், ஊழியர்கள் கருவியை இயக்க மறுக்கின்றனர்.




latest tamil news



கேரளாவில் உள்ள மதுக் கடைகளில் ஒரு கவுன்டரில் பணம் பெற்று, 'டோக்கன்' வழங்கப்படுகிறது. அந்த டோக்கனை எடுத்துச் சென்று, மற்றொரு கவுன்டரில் வழங்கினால், மது பாட்டில் தரப்படும். எனவே தமிழகத்திலும், 20 - 25 மதுக் கடைகளுக்கு பொதுவான ஒரு இடத்தில் பணம் பெற்று, 'டோக்கன்' வழங்குவது குறித்தும், அதை பயன்படுத்தி, எந்த கடையிலும் மது வாங்குவது குறித்தும், அரசு ஆலோசித்து வருகிறது.
இதனால் கடைகளில் கூட்டம் இருக்காது; கூடுதல் விலைக்கு மது விற்பதும் தடுக்கப்படும் என கருதப்படுகிறது.



இதுகுறித்து, ஊழியர்கள் கூறியதாவது:


கேரளாவில் மதுக் கடை வாடகை, உடையும் பாட்டிலுக்கு இழப்பீட்டையும், அரசு வழங்குகிறது. இதனால் அம்மாநில ஊழியர்கள், மது பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்பதில்லை. அதேபோல், தமிழகத்திலும் மதுக் கடை செலவினங்களை, அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.



கடைகளில் விலை பட்டியல்



சென்னை, தலைமை செயலகத்தில், டாஸ்மாக் மாவட்ட, மண்டல மேலாளர்களுடன், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நேற்று முன்தினம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
செந்தில்பாலாஜி பேசியதாவது: மதுபானங்களின் விலை பட்டியல், அனைத்து வாடிக்கையாளருக்கும் தெளிவாக தெரியும்படி, மதுபான கடையின் முன்புறத்தில் வைக்கப்பட வேண்டும். இதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.மதுக் கடைகளை தவிர, மற்ற இடங்களில் மதுபானம் விற்கப்படும் இடங்களை கண்டறிந்து, போலீசாருக்கு தெரிவித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
Chandrasekaran - Chennai ,இந்தியா
29-மே-202310:46:05 IST Report Abuse
Chandrasekaran இன்னுமா அமைச்சர் நீட்டிக்கின்றார்.
Rate this:
Cancel
29-மே-202308:08:40 IST Report Abuse
 N SASIKUMAR YADHAV இப்போது கரூர் கோஷ்டி டோக்கன் கொடுப்பதிலும் பணம் பார்த்துவிடும்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
28-மே-202319:27:54 IST Report Abuse
D.Ambujavalli பாவம், இப்போதுதான் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்று தெரிகிறது அமைச்சருக்கு எல்லாரும் நம்புங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X