காதலனை தேடி கோபிக்கு வந்த கேரள இளம் பெண் மீட்பு
Added : மே 28, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 


கோபி: பேஸ்புக்கில் பழக்கமான காதலனை தேடி, கோபிக்கு வந்த கேரள இளம் பெண்ணை, அனைத்து மகளிர் போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபி பஸ் ஸ்டாண்டில் கடந்த, 26ம் தேதி நீண்ட நேரமாக நின்றிருந்த, 25 வயது பெண்ணை, கோபி மகளிர் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்ததில், 'அந்த பெண் கேரள மாநிலம், இடுக்கியை சேர்ந்த சரண்யா, 25, என தெரியவந்தது. அவர் பி.காம்., படித்துள்ளதாகவும், கோபியை சேர்ந்த வாலிபரிடம், அவருக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததும் தெரியவந்தது. அதனால், திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட சரண்யா, காதலனை தேடி கோபி வந்துள்ளார்.

அந்த காதலனும் கோபி பஸ் ஸ்டாண்ட் வருவதாக, சரண்யாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த காதலன் வரவில்லை. அதனால் செய்வதறியாது கோபி பஸ் ஸ்டாண்டில் காத்திருந்ததாக சரண்யா, மகளிர் போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர், இடுக்கி மாவட்டம், பெருமேடு பகுதி போலீசாருக்கு, மகளிர் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஏற்கனவே தனது மகள் மாயமானதாக, சரண்யாவின் பெற்றோர் அங்கு புகாரளித்திருந்தனர். இதையடுத்து பெருமேடு போலீசார், சரண்யாவின் தாயார் எலிசபெத் ஆகியோர் கோபி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் வந்து, சரண்யாவை அழைத்து சென்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X