கல்வி உலகின் கலங்கரை விளக்கம் நவரசம் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி
Added : மே 28, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 


நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரி அரச்சலுாரில் அமைந்துள்ளது. 1994ல் தொடங்கப்பட்டது. கல்லுாரி தொடங்கிய காலத்தில் இருந்து, 62 தங்கப்பதக்கங்களும், 392 சிறப்பிடங்களும், 750 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தற்போது வெளிவந்த மதிப்பெண் பட்டியலில் ஒரு தங்கப்பதக்கமும், 37 தரவரிசை பட்டியலையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. 21,500 மாணவிகள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். தமிழக அளவில், மதிப்புமிகு மகளிர் கல்லுாரிக்கான ஒன்பது சிறப்பு விருதுகளை இக்கல்லுாரி பெற்றுள்ளது.

தமிழ், ஆங்கிலம் பேச்சு பயிற்சி, கணிப்பொறி பயிற்சி, மென்திறன் பயிற்சி, தலைமை பண்பு வளர்த்தல், நிர்வாகத்திறன் கற்றல் முதலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., வழிகாட்டுதல் இலவச பயிற்சி தரப்படுகிறது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு, தனித்தனி பயிற்சியாளர்களால் பயிற்சி வழங்கப்படுகிறது. நவீன வசதிகளுடன், ரூ.10 லட்சம் செலவில் இறகுபந்து உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
தனியாக வேலைவாய்ப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கல்வியாண்டில், 401 மாணவிகள் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளனர். மாணவிகள் தங்கி பயில பாதுகாப்பான விடுதி வளாகத்திலேயே உள்ளது. கல்லுாரிக்கு வந்து செல்ல இலவச பஸ் வசதி செய்து தரப்பட்டுள்ளது. கல்லுாரி வளாகத்தில், 3,000 மாணவிகள் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வகையில் கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழக அளவில், சிறந்த கல்லுாரிக்கான விருதை பெற்றுள்ளது.
கல்லுாரியில், 14 இளங்கலை பட்ட வகுப்புகளும், 12 முதுகலை பட்ட வகுப்புகளும், 10 ஆராய்ச்சி பட்ட வகுப்புகளும், 7 முனைவர் பட்ட வகுப்புகளும் பல துறைகளைச் சார்ந்த சான்றிதழ் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. இங்கு பயின்ற ஆயிரக்கணக்கான மாணவிகள் அரசு பணிகளில் சேர்ந்து, கல்லுாரிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். மத்திய அரசின் நிதி உதவியுடன் MSME Programme நடைபெற்று வருகிறது. கல்லுாரி வளாகத்தில் தி நவரசம் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி செயல்பட்டு வருகிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X