ஒன்றிய செய்திகள் - கரூர்
Added : மே 28, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

பயணிகள் நிழற்கூடம்
கட்ட வேண்டுகோள்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில், கரூர் நகருக்கு செல்லும் பகுதியில், பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வெள்ளியணை சாலையில் நிழற்கூடம் இல்லை. பழைய
நிழற்கூடம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால், கலெக்டர்

அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வரும், வெள்ளியணை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த, பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் கடும் அவதிப்படுகின்றனர். இதனால், வெள்ளியணை சாலையில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

திருமாநிலையூரில் ஆக்கிரமிப்பு
அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா
கரூர் அருகே உள்ள திருமாநிலையூர் வழியாக திருச்சி உள்ளிட்ட, பல மாவட்டங் களுக்கு பஸ், லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், அப்பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், அந்த பகுதியில் வாகனங்களில் எளிதாக செல்ல முடியவில்லை. விபத்துகள் ஏற்படுகின்றன. பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற தயக்கம் காட்டுகின்றனர். விபத்துகளை தவிர்க்கும் வகையில், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில், திருமாநிலையூரில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவு
சுகாதார சீர்கேடால் மக்கள் அவதி
கரூர் - சேலம் பழைய சாலை வெங்கமேடு பாலம் அருகே, அமராவதி ஆற்றின் பழைய ராஜவாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில், வீடுகள், சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்கிறது. மேலும், வெங்கமேடு பகுதியில், 20 க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி, மீன்கள் விற் பனை கடைகள் உள்ளன. அக்கடைகளின் கழிவுகளை ராஜவாய்க்காலில் கொட்டி விடுகின்றனர். இதனால், அப் பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது, கடுமையான நடவடி க்கை எடுக்க, கரூர் மாநகராட்சி மற்றும் மாசு கட்டுபாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X