லாரிகளுக்கு ஆன்லைனில் அபராதம் ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம்
Added : மே 28, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



நாமக்கல்: ''லாரிகளுக்கு, 'ஆன்லைன்' மூலம் அபராதம் விதிப்பதை ரத்து செய்யக்கோரி, வரும் ஜூன், 6ல், சென்னையில், உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது,'' என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தமிழக தலைவர் தன்ராஜ் கூறினார்.
இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இயக்கப்படும் லாரிகள், ட்ரெய்லர்கள், டேங்கர் லாரிகள், கன்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதனால், செய்யாத குற்றத்திற்கு அபராதம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் தமிழகத்தில் இயக்கப்படும்போது, வேறு மாநிலத்தில் இயக்கப்படுவது போல், ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படுகிறது. வெளிமாநிலங்களில் இயக்கப்படும் லாரிகளுக்கு, தமிழகத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது.
போலீசார் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலர்கள், வாகன எண்ணைக்கூட சரியாக பார்க்காமல், 'ஆன்லைன்' மூலம் அபராதம் விதிக்கின்றனர். மேலும், டி.ஜி.பி.,யை நேரில் சந்தித்து முறையிட்டோம். ஆனால், ஆன்லைன் அபராதம் விதிப்பது தொடர்கதையாக உள்ளது. அவற்றை கண்டித்து, சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், வரும், ஜூன், 6ல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து, மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
மத்திய, மாநில அரசுகள், லாரி உரிமையாளர்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அகில இந்திய மோட்டார் டிரன்ஸ்போர்ட் காங்கிரஸ் (ஏ.ஐ.எம்.டி.சி.,) சேர்மன் சண்முகப்பா ஆலோசனைப்படி, காலவரையற்ற லாரி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சம்மேளன செயலாளர் ராமசாமி, பொருளாளர் தாமோதரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
28-மே-202314:13:18 IST Report Abuse
அநாமதேயம் இது பழைய ராஜாக்கள் காலத்தில் ஓர் ஊழல் மந்திரியை தண்டிக்க கடல் அலையை எண்ணும் பணி கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு மீனவர்கள் மற்றும் பொது மக்கள் கடலில் இறங்கினால் கட்டணம் அடித்து சம்பாதித்த மாதிரி உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X