செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
Added : மே 28, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

பள்ளத்தில் இறங்கிய லாரி
குமாரபாளையம் அருகே, சேலம்-கோவை புறவழிச்சாலையில், நேற்று காலை, 11:௦௦ மணியளவில் கிரானைட் லோடு ஏற்றி வந்த லாரி, கத்தேரி பிரிவு பஸ் ஸ்டாப் அருகே பள்ளத்தில் இறங்கியது. அதன் டிரைவர் முயற்சித்தும், லாரி சாலையின் மேல் ஏற முடியாமல் திணறியது. தகவலறிந்த குமாரபாளையம் போலீசார், சென்னையை சேர்ந்த லாரி டிரைவர் பாலாஜி, 58, என்பவரிடம் விசாரித்ததில், கிரானைட் லோடு ஏற்றி வந்த லாரி, ஆந்திரா மாநிலம், குண்டூரிலிருந்து, கோவைக்கு சென்றது தெரியவந்தது. பின், பொக்லைன் இயந்திர உதவியுடன் லாரி பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.

கொல்லிமலையில்

'பிளாஸ்டிக்' விழிப்புணர்வு
கோடை விடுமுறையை முன்னிட்டு, கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், வனத்துறையின் சார்பில் ஆகயா கங்கை நீர்வீழ்ச்சி அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வனச்சரக அலுவலர் சுப்பராயன் தலைமை வகித்தார். கொல்லிமலை வனச்சரகத்துக்குட்பட்ட ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நெகிழிபை பயன்பாடு தவிர்ப்பு, துணி பைகளின் நன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ராசிபுரம் நகராட்சி குப்பையை
பொக்லைன் மூலம் அகற்ற முடிவு
ராசிபுரம் நகராட்சி குப்பையை, பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராசிபுரம் நகராட்சியின் நகர்மன்ற கூட்டம், சேர்மன் கவிதா தலைமையில் நடந்தது. கமிஷனர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். நகராட்சி பகுதியில் கடந்த காலத்தில் மழை உள்ளிட்டவைகளால் சேதமடைந்த, 4,240 மீட்டர் தார் மற்றும் கான்கிரீட் சாலைகளை, 1.71 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கவும், ராசிபுரம் அடுத்துள்ள சந்திரசேகரபுரத்தில் நகராட்சி சுகாதார பொது பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் குப்பை கிடங்கில் உள்ள குப்பையை, பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட, 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சுகாதார அலுவலர் செல்வராஜ், மேலாளர் வசந்தா, நகராட்சி உதவி செயற்பொறியாளர் கார்த்திக் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.



தி.மு.க.,வில் இணைந்த
மாற்று கட்சியினர்
கொல்லிமலை யூனியன், 14 பஞ்சாயத்துகளில் இருந்து பல்வேறு கட்சியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணையும் விழா, செம்மேட்டில் நடந்தது. சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி, எம்.பி., ராஜேஸ்குமார், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் முன்னிலையில், கொல்லிமலை பகுதியை சேர்ந்த மாற்று கட்சியினர், 100க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில் இணைந்தனர்.

உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், நேற்று உதவி இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட பஸ் ஸ்டாண்டில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், கூடுதல் விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை, நேற்று, டவுன் பஞ்., உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஒப்பந்ததாரர், இளநிலை பொறியாளர், செயல் அலுவலரிடம், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். டவுன் பஞ்., தலைவர் திருமலை, செயல் அலுவலர் ரவிக்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

புதுப்பெண் மாயம்
மனைவி மாயமானதாக அவரது கணவர் போலீசில் புகாரளித்துள்ளார்.
எருமப்பட்டி அருகே, போடிநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 25; கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த மாதம், அக்கா மகளான சகுந்தலா, 19, என்ற பெண்னுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சகுந்தலா, கடந்த, 25ல் திடீரென மாயமானார்.
இதுகுறித்து, கிருஷ்ணமூர்த்தி அளித்த புகார்படி, எருமப்பட்டி போலீசார் புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

நேரு நினைவு நாள் அனுசரிப்பு
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்., சார்பில், முன்னாள் பிரதமர் நேருவின், 59வது நினைவு தினம், நாமக்கல்லில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். நாமக்கல் நேரு பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர தலைவர் மோகன், பொறியாளர் அணி நிர்வாகி பொன்முடி, கொல்லிமலை வட்டார தலைவர் குப்புசாமி, ஐ.என்.டி.யு.சி., நிர்வாகி செல்வம், மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X