ஆயிரம் ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை கண்டெடுப்பு
Added : மே 29, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
A thousand-year-old Ganesha statue discovered   ஆயிரம் ஆண்டுகள் பழமையான  விநாயகர் சிலை கண்டெடுப்பு



அருப்புக்கோட்டை : திருச்சுழி அருகே பரளச்சி மேலையூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி அருகே பரளச்சி மேலையூரில் பழமையான விநாயகர் சிலை இருப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த ஜோதிலிங்க கருப்பசாமி அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ரமேஷ், பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளர்கள் ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சென்று கள ஆய்வு செய்தபோது, அந்தச் சிலை ஆயிரம் ஆண்டுகள் பழமையான முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிலை என தெரிந்தது.

மேலும் அவர்கள் கூறியதாவது: பாண்டியர்களின் திருப்பணியில் உருவானது இந்த சிலை. இரண்டரை அடி உயரம் கொண்ட ஒரு பலகை கல்லில் புடைப்புச் சிலை செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் மழுவும், இடது மேற்கரத்தில் பாசம் என்று ஆயுதத்தையும் தாங்கிய படியும், முன்னிரு கரங்களும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தலையில் மகுடம் தரித்தும், புஜங்களில் ஆபரணங்கள் அணிந்தும், தும்பிக்கையானது மோதகத்துடனும், சிற்பம் முக்கால பாண்டியர்களுக்கு உரித்தான கலை நயத்தில் வடிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தை பார்க்கும் போது இந்த பகுதியில் பெரிய முற்கால பாண்டியரின் சிவன் கோயில் இருந்திருக்க வேண்டும். அவை கால ஓட்டத்திலோ அல்லது அந்நிய படையெடுப்பிலும் அழிந்து இருக்கலாம், என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X