விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டிய ராமர் தனுஷ்கோடியில் திரளான பக்தர்கள் தரிசனம்
Added : மே 29, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



ராமேஸ்வரம்: -ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி, தனுஷ்கோடி அருகே கோதண்ட ராமர் கோவிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் விழா நடந்தது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் கடந்த 27ம் தேதி ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்கியது. இரண்டாம் நாள் விழாவான நேற்று முன் தினம் காலை 6:40 மணிக்கு கோவிலில் இருந்து ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் பல்லக்கில் புறப்பாடாகினர்.

பின், தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோவிலில் ராமர் எழுந்தருளினார். ராமாயண வரலாற்றை நினைவுகூரும் விதமாக கோவில் குருக்கள் சிரஞ்சீவி கூறியதாவது:

சீதையை விடுவிக்கும்படி இலங்கை மன்னர் ராவணனிடம், விபீஷணர் வேண்டுகோள் விடுத்தார். ராவணன் அதைக் கேட்காமல் அவமரியாதை செய்தார்.

உடனே, விபீஷணர் அங்கிருந்து வான் வழியாக புறப்பட்டு தனுஷ்கோடி வந்திறங்கினார்.

அங்கு ராமர், லட்சுமணர், அனுமன் உள்ளிட்ட வானர சேனைகளுடன் சீதையை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ராவணனின் ஒற்றனாக விபீஷணர் வந்திருப்பதாக அனுமன் கோபமடைந்தார்.

உடனே ராமர், அடைக்கலம் தேடி வருவோருக்கு பாதுகாப்பு கொடுப்பது தர்மம் எனக் கூறி நடந்ததை கேட்டறிந்தார்.

பின், லட்சுமணரிடம் கடல்நீரை எடுத்து வரும்படி கூறிய ராமர், இலங்கை மன்னராக விபீஷணரை அறிவித்து பட்டாபிஷேகம் சூட்டினார்.

இவ்வாறு குருக்கள் கூறினார்.

இதையடுத்து, கோவில் குருக்கள், விபீஷணருக்கு தலைப்பாகை அணிவித்து பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதைத் தொடந்து மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X