ஒன்றிய செய்திகள் - கரூர்
Added : மே 30, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

சுக்காலியூரில் திறந்தவெளியை
கழிப்பிடமாக பயன்படுத்தும் மக்கள்
கரூர் அருகே சுக்காலியூரில், 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியினர் பயன்பாட்டுக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கழிப்பிடம் கட்டப்பட்டது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இக்கழிப்பிடம் பல மாதங்களுக்கு முன் பழுதானது. இதை, கரூர் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளது. இதனால், பொது மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். அப்பகுதியில்

சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சுக்காலியூர் பகுதியில் உள்ள கழிப்பிடத்தை, சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன் பாட்டுக்கு
கொண்டுவர, கரூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோடாங்கிபட்டியில் எரியாத
தெரு விளக்குகளால் மக்கள் அவதி
கரூர் அருகே கோடங்கிப்பட்டியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆனால், அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான தெரு விளக்குகள் இரவு நேரத்தில் எரிவது இல்லை. பலமுறை அப்பகுதியினர் புகார் தெரிவித்தும், மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், இரவு நேரத்திலும், வழிப்பறி கொள்ளை அதிகரித்து வருகிறது. மேலும், தெருநாய்கள் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் இரவு
நேரத்தில் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். இதனால்,
கோடங்கிப்பட்டி பகுதியில் உள்ள, தெரு விளக்குகளை எரிய
வைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன் வர வேண்டும்.

வழிகாட்டி போர்டை
மாற்ற வேண்டுகோள்
கரூர்-ஈரோடு சாலை குந்தாணிப்பாளையத்தில், நெடுஞ்சாலை துறை சார்பில், கிராம ஊர் பெயர் அடங்கிய, பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக நாள்தோறும், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன ஓட்டிகளுக்கு, பெயர் பலகையில் இருந்த, ஊர்ப்பெயரின் தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது. தற்போது, பலகை சாய்ந்த நிலையில், எந்தநேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. ஊர் பெயர்களின் எழுத்துகளும் வெளுத்து விட்டது. புதிதாக அப்பகுதியை கடப்பவர்கள், வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். இதனால், புதிதாக ஊர் பெயர்களை எழுதி, போர்டையும் மாற்ற, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X