கிருஷ்ணகிரி: இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் ஜகன்நாத் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும், கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் துவங்க பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது, 10 நாட்கள் தேனீ வளர்ப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இதற்கு குறைந்தபட்சம், 8ம் வகுப்பு படித்த, 18 முதல், 45 வரை உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஜூன், 7க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சியில் சீருடை, காலை மற்றும் மதிய உணவு, தேநீர் இலவசமாக வழங்கப்படும். காலை, 9:30 முதல் மாலை, 5:30 மணி வரை பயிற்சியும், உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். முடிவில், சான்றிதழ் மற்றும் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். https://forms.gle/NVzUMLnB7QZRHdtWA என்ற இணையத்தில் படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி, தொலைபேசி, 04343 240500, 94422 47921, 94888 74921, 90806 76557 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.