மதுரை: விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை அரசியலமைப்பு சட்ட அட்டவணை 9 ல் இருந்து நீக்க வேண்டும்'' இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ரகுநாத் தாதா பாட்டீல், மாநில தலைவர் குருசாமி மதுரையில் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
திண்டுக்கல் சிறுமலையில் தேசிய மாநாட்டை நடத்தினோம். அதன் தொடர்ச்சியாக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். நமது அரசியலமைப்பின் 9வது அட்டவணை, சட்டங்களை பட்டியலிடவும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் விவசாய சங்கங்களால் அதன் சட்டப்பூர்வமான தன்மை குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாத நிலையில் உள்ளது. எனவே விவசாய சட்டங்களை அட்டவணை 9 ல் இருந்து விடுவிக்க வேண்டும். உணவை அரசியலாக்குவது கொடுமை.
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக அறிவிக்கின்றன. விலை வேறுபாடும் அதிகமாக உள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதார விலையை மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்.
இதன் மூலம் மாநில அரசு எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது. சுத்தம் செய்தல், தரம் நிர்ணயம் செய்தல், பேக்கேஜிங், போக்குவரத்து செலவுகளையும் குறைந்த பட்ச ஆதாரவிலையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகளின் மாத வருமானத்தை உறுதி செய்யும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலையை காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்.
முக்கிய விவசாய விளைபொருட்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 ல் இருந்து நீக்கினால் விவசாயிகள் சிறந்த விலையை பெறமுடியும். கரும்புக்கான தொகையை 14 நாட்களுக்குள் ஆலை நிர்வாகம் தராவிட்டால் மத்திய கரும்பு கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் 15 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.