மீனவர்களுக்கு நிவாரணம் உயரும் என்கிறார் அமைச்சர்
Added : மே 30, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

புதுக்கோட்டை: ''மீனவர்களுக்கான மீன்பிடி தடை கால நிவாரண உதவி உயர்த்தி வழங்கப்படும்,'' என, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட கால்நடை பண்ணையில், நேற்று, தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ஜல்லிக்கட்டில் நிர்வாக காரணங்களுக்காக, ஆன்லைன் பதிவு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அது கட்டாயம் அல்ல. மீனவர்களுக்கான மீன்பிடி தடைகால நிவாரண உதவித் தொகையையும், டீசல் மானியத்தையும் முதல்வர் அறிவுரைப்படி உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து மீனவர்களுக்கும் வாக்கி - டாக்கி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக, புதிய டிரான்ஸ்மீட்டர் செயல்பாட்டை, தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

இலங்கை கடற்படையிடம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளில், 40 படகுகள் மட்டுமே மீண்டும் கொண்டு வர தகுதி வாய்ந்ததாக உள்ளன. படகுகளை பறிகொடுத்த மீனவர்களுக்கு, தமிழக அரசு இழப்பீடு தொகை வழங்கி வருகிறது. அதை கூடுதலாக வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கால்நடைத் துறையில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடைமுறையை வகுத்து விட்டு நிரப்புவோம்.

புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில், மணல் திட்டுக்கள் அகற்றப்பட்டு, படகுகள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில், பால் உற்பத்தி குறையவில்லை. தனியார் பால் நிறுவனங்கள், உற்பத்தியாளர்களிடம் கூடுதல் விலைக்கு பால் வாங்குவதால், தட்டுப்பாடு இருப்பது போன்ற தோற்றம் உள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு முறையாக தான் சப்ளை செய்யப்படுகிறது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையவில்லை. தீவனங்கள் உற்பத்தியில் சுணக்கம் உள்ளது.

இவ்வாறு, அவர் பேசினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X