பத்திரிகையாளர் இன்றி கவுன்சிலர் கூட்டம்: நகராட்சி தலைவர் சர்வாதிகாரம்
Added : மே 30, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Councilor meeting without journalists: the dictatorship of the municipal president  பத்திரிகையாளர் இன்றி கவுன்சிலர் கூட்டம்: நகராட்சி தலைவர் சர்வாதிகாரம்

பல்லடம் நகராட்சியில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு அனுமதிக்காததால், நகராட்சி தலைவர் சர்வாதிகாரத்தில் ஈடுபடுவதாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி தலைவராக திமுக.,வைச் சேர்ந்த கவிதாமணி உள்ளார். நகராட்சி கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வருகை தந்த பத்திரிகையாளர்களை வெளியே செல்லுமாறு நகராட்சித் தலைவர் தெரிவித்தார். பத்திரிகை சுதந்திரத்தை பறிப்பதாகவும், எந்த சட்ட திட்ட விதிமுறையில் இது உள்ளது என்றும், நகராட்சி தலைவரிடம் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பத்திரிகையாளர்கள் செய்திகளை வெளியிடுவதால் யாருக்கும் அனுமதி கிடையாது. இதற்கு நகராட்சி தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது. கவுன்சிலர்களின் கையொப்பம் பெற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கவிதாமணி கூறினார்.
இதேபோல், ' கூட்டத்துக்கு யாரை அனுமதிப்பது என்பதை முடிவு செய்ய தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அதில் நாங்கள் தலையிட முடியாது என்றும், 18 வார்டு கவுன்சிலர்களும் கையெழுத்து இட்டுள்ளனர் என, கமிஷனர் விநாயகம் கூறினார். இவர் கூறியதை கேட்டு கூட்டத்தில் இருந்த கவுன்சிலர்கள் சிலர், எங்களிடம் இது குறித்து தெரிவிக்கவில்லை. நாங்கள் கையெழுத்தும் இடவில்லை என்றனர். இதையடுத்து பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

நகராட்சி தலைவர் கவிதாமணியின் கணவர் ராஜேந்திரகுமார். இவர் திமுக., நகர செயலாளராக உள்ளார். சமீப நாட்களாக, இவர் மீது செக் மோசடி, நில மோசடி வழக்குகள் காரணமாக, பல்லடம் கோர்ட் இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டது. மேலும், நகராட்சி கூட்டம் நடத்தப்படாமலேயே, கூட்டம் நடந்ததாக கவுன்சிலர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. டெண்டர் நடத்தாமல் நகராட்சி குப்பைக்கான டெண்டர் தேர்வு செய்யப்பட்டதாகவும் கவுன்சிலர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. மேற்கூறிய சம்பவங்கள், முறைகேடுகள் குறித்து, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. இதை கருத்தில் கொண்டே, நகராட்சி கூட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் நகராட்சியில் நடக்கும் ஊழல் முறைகேடுகள் வெளியே தெரிந்து விடும் என்பதால் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்பதை உண்மை.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
g.s,rajan - chennai ,இந்தியா
30-மே-202317:54:07 IST Report Abuse
g.s,rajan Whether Modi is the Role Model...???.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X