ஒரு மாவட்டம் ஒரு விளைபொருள் மத்திய அதிகாரிகள் ஆய்வு
Added : மே 31, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Central authorities inspect a produce in a district   ஒரு மாவட்டம் ஒரு விளைபொருள்  மத்திய அதிகாரிகள் ஆய்வு



விருதுநகர்:விருதுநகரில் ஒரு மாவட்டம் ஒரு விளைபொருள் என்னும் அணுகுமுறையின் கீழ் விருதுநகர் மாவட்டம் சிறுதானியத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.தேர்வு செய்யப்பட்டுள்ள பொருளின் உற்பத்தியை அதிகப்படுத்தி விளைபொருளை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம். ஹைதராபாத் எண்ணெய் வித்து உற்பத்தி இயக்குனரக முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் ஸ்ரீகாந்த், திட்ட ஆலோசகர் ஹிமான்சு பி கோடே மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.

கலெக்டர் ஜெயசீலனுடன் கலந்துரையாடினர். அப்போது சிறுதானிய உணவுகளை பிரபலபடுத்தும் நோக்கில் உணவு திருவிழா நடத்துவது, அரசு அதிகாரிகளிடையே சிறுதானிய உணவு பயன்பாட்டினை அதிகரிப்பது ஆகியவை குறித்து வேளாண் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். உடனடி சிறுதானிய உணவுகளின் ஊட்டச்சத்து விகிதங்களை ஆய்வு செய்து குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் தயார் செய்து வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்ந்து மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ராமசுப்பிரமணியராஜா, நபார்டு வங்கி மேலாளர் ராஜசுரேஷ்வரன், முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடன் கலந்துரையாடினர். செயல்திட்ட அறிக்கை தயார் செய்து ஒப்புதலுக்கு வழங்கினால் தேவையான வழிகாட்டுதல்களும் நிதி உதவியும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினர்.

கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள், இயந்திரங்களையும் பார்வையிட்டனர். வேளாண் இணை இயக்குநர் பத்மாவதி, கலெக்டர் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X