டிராக்டரில் சென்ற சிறுவன் தவறி விழுந்து பரிதாப பலி
Added : மே 31, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
The boy who was riding the tractor fell down and died a tragic death   டிராக்டரில் சென்ற சிறுவன் தவறி விழுந்து பரிதாப பலி



திட்டக்குடி : திட்டக்குடி அருகே, டிராக்டரில் இருந்து விழுந்த சிறுவன் பரிதாமாக இறந்தான்.

அரியலுார் மாவட்டம், தளவாய் கூடலுார் கிரா மத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி ரேகா,32. இவர்களுக்கு வரதராஜன், 10, என்ற மகன் உள்ளார்.

திட்டக்குடி அடுத்த பெருமுளையில் உள்ள தாய் வீட்டில் மகனுடன் ரேகா வசித்து வருகிறார். வரதராஜன், அதே பகுதியிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தார். ரேகாவின் தம்பி மணிகண்டன், புதிய டிராக்டர் வாங்கினார். நேற்று காலை டிராக்டரை எடுத்துக்கொண்டு அதே பகுதியிலுள்ள தனபால் என்பவரின் வயலில் உழவுப்பணிக்காக சென்றனர். டிராக்டரை மணிகண்டனின் உறவினரான, அரியலுார் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டினார்.

டிராக்டரின் இடதுபக்கத்தில் மணிகண்டனும், வலதுபக்கத்தில் வரதராஜனும் அமர்ந்திருந்தினர். வயலில் இருந்த வரப்பு ஒன்றில் டிராக்டர் ஏறி இறங்கியபோது, வரதராஜன் நிலைதடுமாறி கீழே விழுந்தான்.

தலையில் டிராக்டரின் டயர் ஏறியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X