லால்குடி:போலீஸ் விசாரணைக்கு பயந்து, வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, சதுர்ப்பகம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மகன் கோவிந்தராஜ், 23. இவர்களுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மனோன்மணி என்ற பெண்ணுக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக முன் விரோதம் இருந்தது. அது தொடர்பாக, கடந்த 23ம் தேதி, அந்தப் பெண் போலீசில் புகார் செய்தார்.
லால்குடி போலீசார், கோவிந்தராஜ் மீது வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணைக்கு பயந்த கோவிந்தராஜ், நேற்று முன்தினம், வீட்டில் யாரும் இல்லாத போது, பூச்சி மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தார்.
உறவினர்கள், அவரை மீட்டு, லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். சிகிச்சை பலனின்றி, நேற்று அவர் இறந்தார். லால்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.