மிளகாய் பொடி துாவி ரூ.1.50 கோடி கொள்ளை! நெல்லை அருகே எட்டு பேர் கும்பல் கைவரிசை
Added : மே 31, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Chili Powder Dust Rs.1.50 Crore Robbery! A gang of eight people lined up near Nellai   மிளகாய் பொடி துாவி ரூ.1.50 கோடி கொள்ளை! நெல்லை அருகே எட்டு பேர் கும்பல் கைவரிசை

திருநெல்வேலி:காரில் சென்ற நகைக் கடைக்காரரை தாக்கி, காரை கடத்தி, 1.5 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற எட்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலியில் நகைக்கடை நடத்தி வருபவர் விஸ்வநாத். இவரது மகன் சுஷாந்த் 32. வட மாநிலங்களில் ஒன்றை சேர்ந்த இவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருநெல்வேலியில் நகைக் கடை நடத்தி வருகின்றனர்.

சுஷாந்தின் மாமனார் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் நகைக்கடை நடத்தி வருகிறார். மாமனாரிடம் பணம் கொடுத்து, நகைகள் வாங்கி வருவதை சுஷாந்த் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

நேற்று காலை சுஷாந்த் அவரது உதவியாளர் விஷால், 22, ஆகியோர் கேரளாவுக்கு காரில் சென்றனர். சுஷாந்த் காரை ஓட்டினார். காலை 7:00 மணிக்கு சுஷாந்தின் காரை இரண்டு கார்கள் பின் தொடர்ந்தன.

மூன்றடைப்பு கடந்ததும் நான்கு வழிச்சாலையில் மேம்பாலத்தில் கார் ஏறும்போது பின் தொடர்ந்தவர்கள், சுஷாந்த் கார் மீது மோதி நிறுத்தினர்; சுஷாந்தையும் விஷாலையும் தாக்கினர்; விஷால் தப்பி ஓடினார்.

பாலத்தில் வந்த ஆம்னி பஸ் டிரைவர் மற்றும் பயணியர் பஸ்சை நிறுத்தி என்ன தகராறு என இறங்கி விசாரித்தனர். இதையடுத்து, அந்த கும்பல் சுஷாந்தை காருக்குள் தள்ளி அவர்களே ஓட்டிச் சென்றனர்.

நாங்குநேரி நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடிக்கு முன் இடதுபுறம் திரும்பும் நெடுங்குளம் கிராம சாலையில், காரை ஓட்டிச் சென்றனர்.

காட்டுப் பாதைக்கு சென்று, சுஷாந்தை இறக்கி விட்டதோடு காரிலிருந்த 1.5 கோடி ரூபாயுடன் அந்த கும்பல் தாங்கள் வந்த கார்களில் தப்பினர். இது குறித்து சுஷாந்த் அங்கிருந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

நெடுங்குளத்தில் கார் வேகமாக செல்வதை தன் வீட்டு 'சிசிடிவி' மூலம் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

மூன்றடைப்பு மற்றும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். பணத்தை கொள்ளையடித்த கும்பல் நாங்குநேரி சுங்கச்சாவடியை தாண்டி நாகர்கோவில் சாலையில் செல்லவில்லை. அவர்கள் மீண்டும் திருநெல்வேலி நோக்கி திரும்பி இருக்கலாம் என தெரிகிறது.

பணத்தை பறித்த கும்பலில் எட்டு பேர் இருந்ததாகவும் அவர்கள் தன் மீது மிளகுத்துாளை துாவியதாகவும் சுஷாந்த் தெரிவித்துள்ளார். நான்கு தனிப்படைகள் விசாரிக்கின்றன.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X