டயர் கழன்று ஓடிய அரசு பஸ் பயணிகள் உயிர் தப்பினர்
Added : மே 31, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
The passengers of the government bus escaped with their lives as the tire came off   டயர் கழன்று ஓடிய அரசு பஸ் பயணிகள் உயிர் தப்பினர்

போடி:தேனி மாவட்டம், போடி டெப்போ அரசு பஸ்களில் டயர்கள் கழன்று ரோட்டில் ஓடும் நிலை தொடர்கிறது. நேற்று இரண்டாவது முறையாக பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தமிழக, கேரளா பகுதியை இணைக்கும் வழித்தடத்தில் போடி பஸ்ஸ்டாண்ட் உள்ளது. போடி டெப்போவில் இருந்து கிராமங்களுக்கு 23 பஸ்களும், பிற மாவட்டங்களுக்கு 46 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

பஸ்கள் முறையாக பராமரிக்காததால் டயர்கள் அடிக்கடி கழன்று ரோட்டில் ஓடுவது தொடர்கிறது.

நேற்று காலை போடி -- சின்னமனுார் டவுன் பஸ் (டி.என். 57 என். 1365) தேவாரம்- போடி ரோட்டில் வந்து கொண்டிருந்தது. காளிவேல் ஓட்டினார். காலை 6:40 மணியளவில் தர்மத்துப்பட்டி அருகே வரும் போது பஸ்சின் பின் டயர்கள் கழன்று ரோட்டில் ஓடின.

டிரைவர் சாதுர்யமாக பிரேக் பிடித்ததால் பின்பக்க டயர்கள் இன்றி சிறிது தூரம் சென்று பஸ் நின்றது. பயணிகள் உயிர் தப்பினர். மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் போடிக்கு அனுப்பப்பட்டனர்.

15 நாட்களுக்கு முன்பு போடியில் இருந்து வீரபாண்டி சித்திரை திருவிழாவிற்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ் போடி-- தேனி ரோட்டில் மீனா விலக்கு அருகே பின் டயர்கள் கழன்று சிறிது தூரம் ஓடி ரோட்டின் மைய தடுப்புச் சுவர் மோதி நின்றது குறிப்பிடத்தக்கது.

பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் போக்குவரத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X