கோயிலில் உண்டியல் எண்ணும் பணி பணத்தை திருடிய 2 பெண்கள் கைது
Added : மே 31, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் உண்டியல் பணத்தை எண்ணுவது போல் திருடிய இரண்டு பெண்கள் கையும், களவுமாக பிடிபட்டனர்.

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று உண்டியல் பணத்தை எண்ணும் பணி நடந்தது. சிவகாசியை சேர்ந்த சுமார் 10பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோயில் உண்டியலை திறக்கும் போதும் உண்டியல் பணத்தை எண்ணும் போதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று சங்கரநாராயணசுவாமி கோயிலில் உண்டியல் பணம் எண்ணுவது வீடியோ பதிவு செய்யப்பட்டது. கோயில் கண்காணிப்பாளர் சந்திரசேகர் டிவியில் உண்டியல் பணம் எண்ணப்படுவதை கண்காணித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பெண் சேலையை உதறுவது போல பணத்தை எடுப்பதும், மற்றொரு பெண் பணத்தை எடுத்து சேலையில் சொருகி வைப்பதும் தெரிந்தது. இதுகுறித்து சந்திரசேகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

சங்கரன்கோவில் டவுன் போலீசார் கோயிலுக்கு வந்து சந்தேகத்திற்கு இடமான இரண்டு பெண்களிடமும் விசாரணை செய்தனர். அப்போது அந்தப் பெண்கள் பணத்தை திருடியது தெரியவந்தது மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட 18 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உண்டியல் பணத்தை திருடிய சிவகாசி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமி(63 ), சிவகாசி விஸ்வநத்தம் தெருவை சேர்ந்த ஆறுமுகசாமி மனைவி கலாவதி(63) இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X