14 வயது மகள் கடத்தல் பெற்றோர் கதறல் மனு
Added : ஜூன் 01, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

கிருஷ்ணகிரி:'மாணவி கடத்தல் தொடர்பாக, போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை' என, மாணவியின் பெற்றோர், கிருஷ்ணகிரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனுஅளித்தனர்.

கிருஷ்ணகிரி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 14 வயது மாணவி, அப்பகுதி அரசு உயர்நிலைப்பள்ளியில்,ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

ஏப்., 20 இரவில், வீட்டருகே உள்ள கடைக்கு சென்றவர், மீண்டும் திரும்பவில்லை. அசோக் என்பவர் அவரை கடத்திச் சென்றதாக, மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

எனினும், நடவடிக்கை இல்லை. இதையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோர்எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூரிடம் நேற்று புகார் அளித்தனர்.

புகாரில் கூறியுள்ளதாவது:

கிருஷ்ணகிரி அடுத்த மாதிநாயனப்பள்ளியைச் சேர்ந்த அசோக் என்பவர், ஏற்கனவே மகளை கடத்திச் சென்றார். அவரிடமிருந்து மகளை மீட்டு வந்தோம். தற்போதும் கடத்தி சென்றுள்ளார்.

அவருக்கு திருமணமாகி, நான்காம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். எங்கள் மகள்,உயிருடன் உள்ளாரா என்ற சந்தேகம் உள்ளது. மகளை மீட்டு, கடத்தியவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறியுள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X