கள்ளக்காதலில் ஈடுபட்ட கணவரை 'ஆசிட்' ஊற்றி கொன்ற மனைவி கைது
Added : ஜூன் 01, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

ஈரோடு:ஈரோடில், பல பெண்களுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட கணவரை, 'ஆசிட்' ஊற்றியும், மரக் கட்டையால் அடித்தும், மனைவி கொலை செய்தார்.

ஈரோடு, கனிராவுத்தர் குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 52; தறி பட்டறை தொழிலாளி. இவர் மனைவி பத்மா, 50. இவர்களது மகள் தீபா இறந்து விட்டார். மகன் சுரேஷ், திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார்.

கணவர் சுப்ரமணி, பல பெண்களுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு, ஊதாரித்தனமாக சுற்றி வந்துள்ளார். வீட்டு செலவுக்கு சரிவர பணம் கொடுக்காமல் இருந்தார்.

இதுபற்றி பலமுறை பத்மா, தன் கணவனை கண்டித்தார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல், தன் செயலை அவர் தொடர்ந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இருவரும் துாங்க சென்று விட்டனர்.

நேற்று அதிகாலை, 3:15 மணிக்கு எழுந்த பத்மா, வீட்டில் இருந்த பாத்ரூம் கழுவும் ஆசிட்டை சுப்ரமணியின் தலை, முகத்தில் ஊற்றினார்.

அதன் பிறகும் ஆத்திரம் அடங்காமல் மரக்கட்டையால் அவரது தலையில் அடித்தார்.

இதில் பலத்த காயமடைந்த சுப்ரமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

வீட்டை பூட்டிய பத்மா, வீரப்பன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் சென்று தகவல் தெரிவித்து, சரணடைந்தார்.

போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீரப்பன்சத்திரம் போலீசார், பத்மாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X