கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி பருத்தி வார சந்தையில் ரூ.4 லட்சத்திற்கு, விவசாயிகளிடம் பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வார சந்தை நடத்தப்படுகிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலர் பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று நடந்த சந்தைக்கு எல்.ஆர்.ஏ., ரக பஞ்சு 170 மூட்டை, கொட்டு ரகம் 25 மூட்டை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
எல்.ஆர்.ஏ., ரகம் குறைந்தபட்சம் ரூ.5,399, அதிகபட்சம் ரூ. 6,479, கொட்டு ரகம் குறைந்தபட்சம் ரூ. 2,299, அதிகபட்சம் ரூ.2,800 த்திற்கு விலை போனது.
மொத்தம் 55 விவசாயிகள் கொண்டுவந்த 195 பஞ்சு மூட்டைகள் ரூ. 4 லட்சத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டது.