35 ஏக்கர் ஏரியை காணோம்! ஆவணங்களில் தான் இருக்கு என விவசாயிகள் புகார்
Added : ஜூன் 01, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
See the 35 acre lake! Farmers complain that it is only in the documents   35 ஏக்கர் ஏரியை காணோம்! ஆவணங்களில் தான் இருக்கு என விவசாயிகள் புகார்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே காணாமல் போன கடக்கன் ஏரியை மீட்டுத்தர, கிராம மக்கள் கலெக்டரிடம் முறையிட முடிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் அருகே வெண்டையம்பட்டி பெரிய ஏரியின் வடிகால், 24.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துார் வாரப்பட்டு வருகிறது.

இந்த வாய்க்கால் முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அவற்றை அகற்றி, பணிகளை மேற்கொள்ள, பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

மேலும், இ.கம்யூ., கட்சியினர் மே 23ல், இது தொடர்பாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

பூதலுார் தாசில்தார் பெர்சியா, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் தினேஷ் கண்ணன் பேச்சு நடத்தினர்.

பின், மே 26 முதல் வருவாய் துறையினர் அளவீடு பணியை துவங்கினர். அப்போது, வெண்டையம்பட்டி பெரிய ஏரி வடிகால் வாய்க்காலின் ஓரத்தில், காங்கேயம்பட்டி பகுதியைச் சேர்ந்த, 34.5 ஏக்கரில் உள்ள கடக்கன் ஏரி, அடையாளமே இல்லாத அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையறிந்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஏரியின் மெய்க்கால் புறம்போக்கு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய கம்யூ., ஒன்றிய செயலர் முகில் கூறியதாவது:

காணாமல் போன ஏரியையும், வடிகால் வாய்க்காலையும் மீட்டுத்தர வேண்டுமென, கலெக்டரிடம் முறையிட உள்ளோம். காணாமல் போன ஏரி முழுமையாக வயல் வெளியாகவும், மண் திட்டாகவும் காட்சி அளிக்கிறது.

ஒரு ஏரியே காணாமல் போகும் அளவிற்கு, அதை பராமரிக்காமல் அலட்சியமாக இருந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X