ஊழலுக்கு எதிரான நடைபயணம் ஜூலை 9ல் ராமேஸ்வரத்தில் துவக்கம் பா.ஜ. தலைவர் அண்ணாமலை தகவல்
Added : ஜூன் 02, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Anti-corruption walk launched on July 9 in Rameswaram by BJP. Chairman Annamalai information   ஊழலுக்கு எதிரான நடைபயணம் ஜூலை 9ல் ராமேஸ்வரத்தில் துவக்கம் பா.ஜ. தலைவர் அண்ணாமலை தகவல்

தூத்துக்குடி:''தி.மு.க.,வின் ஊழலுக்கு எதிரான பா.ஜ.,வின் நடைபயணம் ஜூலை 9ல் ராமேஸ்வரத்தில் துவங்குகிறது, '' என, பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

துாத்துக்குடியில் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தி.மு.க., ஒன்றிய செயலாளர்களின் கையில் உள்ளது. போலீஸ் கையில் இல்லை. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும் என துணை முதல்வர் சிவகுமார் அதிகாரிகள் மத்தியில் கூறியதற்கு தமிழக முதல்வர் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. அவர் தமிழகத்தின் உரிமைகளை தொடர்ந்து விட்டுக் கொடுத்து வருகிறார்.

மேகதாது அணை கட்ட முயற்சித்தால் நாங்கள் தடுத்து நிறுத்துவோம். நடை பயணமாக செல்வோம். பா.ஜ., அமலாக்கத்துறையை வைத்துபழிவாங்குகிறது என்ற முதல்வரின் குற்றச்சாட்டை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழகத்தில் அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கையை கண்டு முதல்வர் பயப்படுகிறார்.



இந்தியாவுக்கு பின்னடைவு




தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலனுக்காக அரசு திட்டங்களை செயல்படுத்தவில்லை. மத்திய அரசு அளிக்கும் நிதியும் திரும்ப செல்கிறது. எதிர்க்கட்சிகள் புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பை புறக்கணித்துள்ளனர். 2024 தேர்தலில் அவர்கள் பார்லிமென்டை விட்டு வெளியே செல்வார்கள்.

தென் தமிழகத்தை மையமாக வைத்து சிறப்பு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவு என்பது பிற்காலத்தில் தெரியவரும்.

இன்று தாமிரத்திற்காக சீனா உள்ளிட்ட நாடுகளிடம் கைகட்டி நின்று கொண்டிருக்கிறோம். எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அண்ணாமலை 'நான் யாருக்கும் விரோதி இல்லை. பழைய பேச்சை வைத்து என்னை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். நான் எப்போதும் இப்படித்தான் இருப்பேன்.

தி.மு.க.,வின் ஊழலுக்கு எதிராக பா.ஜ., நடை பயணம் ஜூலை 9ல் ராமேஸ்வரத்தில் துவங்குகிறது. அதற்கு முன்னதாக ஜூலை முதல் வாரத்தில் தி.மு.க. பைல்ஸ் எனும் தி.மு.க. ஊழலின் இரண்டாம் பாகத்தை வெளியிடுவோம், என்றார்.



சர்ச்சில் பிரார்த்தனை




முன்னதாக துாத்துக்குடி பனிமயமாதா சர்ச்சிற்கு சென்ற அண்ணாமலை பிரார்த்தனை செய்தார். ஆலய பங்கு தந்தை குமார் ராஜா புனித நீர் தெளித்து ஆசீர்வதித்தார். ரோஜா மாலையை பங்கு தந்தையிடம் கொடுத்து பனிமயமாதாவிற்கு அணிவித்தார். பட்டாடை மற்றும் மெழுகுவர்த்தியை காணிக்கையாக வழங்கினார். ஆக. 5ல் நடக்கும் ஆலய திருவிழாவில் பங்கேற்க அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்தனர்.

நான் யாருக்கும் விரோதி இல்லை. பழைய பேச்சை வைத்து என்னை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். நான் எப்போதும் இப்படித்தான் இருப்பேன்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X