நாமக்கல் அருகே தாய்க்கு கோவில் கட்டும் மகன் சிலை வைத்து தாயாலேயே திறந்து நெகிழ்ச்சி
Added : ஜூன் 02, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
The son who built a temple for his mother near Namakkal placed the statue and opened it himself  நாமக்கல் அருகே தாய்க்கு கோவில் கட்டும் மகன் சிலை வைத்து தாயாலேயே திறந்து நெகிழ்ச்சி

நாமக்கல்:நாமக்கல் அருகே, தாய்க்கு கோவில் கட்டி வரும் மகன், கோவிலுக்குள் தாயின் சிலையை வைத்து, அவரது கையாலேயே திறந்து வைத்தது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நாமக்கல், கூலிப்பட்டியை சேர்ந்தவர் பிரபு, 30; கூலிப்பட்டி-சிவியாம்பாளையம் சாலையில், கோவில் கட்டி வருகிறார். அங்கு தாயின் உருவச்சிலையை அமைத்த நிலையில், நேற்று தாயைக் கொண்டே சிலையை திறந்து வைத்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தந்தை வாசு, 2003ல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அப்போது எனக்கு வயது, 10; என் தங்கை ஜீவாவுக்கு ஒன்பது வயது. தந்தை இறந்தவுடன் தாய் மணி, 48, எங்களை ஆளாக்க கடுமையாக போராடினார்.

பத்தாம் வகுப்பு வரை படித்த நான், 'வெல்டிங்' தொழிலை கற்று தேர்ந்து, கூலிப்பட்டியிலேயே சொந்தமாக பட்டறை அமைத்தேன். தொழில் நல்ல முறையில் நடந்ததால், தங்கைக்கு திருமணம் செய்து வைத்தேன். என் திருமணமும் முடிந்து ஒரு குழந்தை உள்ளது.

பாடுபட்டு வளர்த்த தாயை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறேன். ஆனாலும், அவரை என்றும் நினைவில் வைத்திருக்க, கூலிப்பட்டி-சிவியாம்பாளையம் சாலை சக்தி நகரில், 1,500 சதுர அடியில் கோவில் கட்டினேன். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, 3 அடி உயரம், 80 கிலோ எடையில், தாயின் முழு உருவச்சிலையை தயாரித்து கொண்டு வந்தேன். இந்த விஷயம் அனைத்தும் திறப்பு விழா நடந்த பிறகே, தாய்க்கும், குடும்பத்தாருக்கும் தெரியும். இந்த கோவில் என்னுடைய கனவு. விரைவில் பணி நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தாய் மணி கூறும்போது, 'இப்படி ஒரு மகனை பெற்றெடுத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு தெரியாமலே, எனது சிலையை தயாரித்து, நண்பன் வீட்டில் பாதுகாத்து வந்துள்ளான். தற்போது என் மூலமாகவே திறந்து வைத்து, பெருமைப்படுத்தி உள்ளான்' என்று, ஆனந்த கண்ணீருடன் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X