ரூ. 2.42 லட்சம் மோசடி: 2 பேர் கைது நீதிமன்ற ஊழியருக்கு வலை
Added : ஜூன் 02, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Rs. 2.42 lakh fraud: 2 arrested, court employee netted   ரூ. 2.42 லட்சம் மோசடி: 2 பேர் கைது நீதிமன்ற ஊழியருக்கு வலை

கடலுார்:விபத்து வழக்கில் நீதிமன்றத்தை ஏமாற்றி ரூ.2.42 லட்சத்தை மோசடியாக எடுத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கோர்ட் ஊழியரை தேடி வருகின்றனர்.

கடலுார் முதன்மை சார்பு நீதிபதி அன்வர் சதாத் மாவட்ட குற்றப்பிரிவில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;

கடலுார் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வாகன விபத்து வழக்கில் மனுதாரர்களான லாவண்யா சரண்யா ஆகியோருக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை 386106 ரூபாயை பாலுார் வங்கியில் வைப்பீடாக வைக்கப்பட்டது.

இதேபோன்று மற்றொரு விபத்து வழக்கில் மனுதாரர்களுக்கு சேர வேண்டிய இழப்பீடு தொகை 501482 ரூபாயை கடலுார் வங்கியில் வைப்பீடாக வைக்கப்பட்டது.

2012ல் லாவண்யா சரண்யா ஆகியோர் மேஜர் ஆன பின் வழக்கறிஞர் மூலம் இழப்பீடு தொகை கோரி மனு செய்தனர். வழக்கு எண் - 826/03க்கு பதிலாக வழக்கு எண் -1826/03ல் உள்ள அதிக தொகையான வட்டியுடன் 540540 ரூபாயை நீதிமன்றத்தை ஏமாற்றி பெற்றுள்ளனர்.

நீதிமன்றத்தில் உதவி சிரஸ்தாரராக பணிபுரிந்த குணாளன் இதை தெரிந்துகொண்டு நீதிமன்றத்தில் இருந்து 826/03 வழக்கு எண் வைப்பீடு ரசீதை திருடி மோடிசயில் ஈடுபட்டுள்ளார்.

அதாவது நீதிபதி வழங்கியதுபோல போலியான கடிதம் தயாரித்து கடலுார் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்த சிவதாஸ் உதவியோடு வங்கியில் கொடுத்து வண்டிப்பாளையத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் பெயருக்கு 242000 வரவோலை பெற்றுள்ளனர்.

அவரது பெயரில் மற்றொரு வங்கியில் உள்ள கணக்கில் பணத்தை எடுத்து மூன்று பேரும் நீதிமன்றத்தை ஏமாற்றி பயனடைந்துள்ளனர்.

இதேபோன்று வழக்கில் மீதி பணம் இருப்பதை தெரிந்து கொண்டு நீதிமன்றத்தை ஏமாற்றி அந்த பணத்தை பெறுவதற்கு வழக்கறிஞர் மீண்டும் லாவண்யா சரண்யா மூலம் இழப்பீடு தொகை கேட்டு மனு செய்துள்ளார்.

இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

இது குறித்து கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து சத்தியமூர்த்தி சிவதாஸ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள குணாளனை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X