சாராய விற்பனையை தடுக்க தவறிய போலீஸ் ஏட்டு 'சஸ்பெண்ட்'
Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Police suspend for failing to stop liquor sale  சாராய விற்பனையை தடுக்க தவறிய போலீஸ் ஏட்டு 'சஸ்பெண்ட்'

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், சாராய விற்பனையை தடுக்க தவறிய போலீஸ் ஏட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் போலீசார் சாராய வேட்டை நடத்தினர். இதில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்க தவறிய ஒரு போலீஸ் எஸ்.ஐ., உள்பட ஐந்து போலீசார், சில நாட்களுக்கு முன்பு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில், ஏட்டாக பணிபுரிந்து வந்த ராஜசேகர், 45, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறி, சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-ஜூன்-202321:23:44 IST Report Abuse
Ramesh Sargam போலீஸ் ஏட்டு ஒரு சிறிய மீன். பெரிய பெரிய திமிங்கலம் எல்லாம் மாட்டவில்லையே..
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
02-ஜூன்-202319:59:26 IST Report Abuse
S.Ganesan ஏமாளி ஏட்டு கிடைத்து விட்டார். இனி உண்மையான குற்றவாளிகள் நிம்மதியாக இருக்கலாம்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-ஜூன்-202319:07:35 IST Report Abuse
D.Ambujavalli இவர்களுக்கு சாராய வியாபாரிகள் 'அளந்ததற்கு' விசுவாசமாக இருக்க வேண்டாமா ? சஸ்பெண்ட் நாடகம் எதற்கு டிஸ்மிஸ் செய்தாலும் உட்கார்ந்து சாப்பிடும் அளவு சேர்த்திருப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X